Skip to main content

Posts

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் நவீன எழுத்துலகின் ஆளுமை

  எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் நவீன எழுத்துலகின் ஆளுமை எஸ் , ராமகிருஷ்ணன் மலேசிய வருகையை முன்னிட்டு இப்பதிவு   நவீன தமிழ் எழுத்துலகின் தவிர்க்க முடியாத ஆளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள். இன்றைக்கு இருக்கும் தமிழின் முதன்மை எழுத்தாளர்களில் ஒருவர். எஸ்ரா எழுதத்தொடங்கிய 1984 முதல் இன்றுவரை இடைவிடாமல் எழுதிவருகிறார். அவருடைய முதல் படைப்பு ‘ பழைய தண்டவாளம் ’ என்ற சிறுகதை கனையாழி மாத இதழில் வெளியாகித் தன் படைப்புலக நுழைவை தகவமைத்தார். அதற்குப் பின்னர் அவரை வலிமையாக அடையாளம் காட்டிய ‘ துணையெழுத்து ’ என்ற இலக்கியக் கட்டுரைத் தொடர் ஆனந்த விகடன் வார இதழில் வெளியாகி பரவலான வாசக கவனத்தைப் பெற்றது , கதாவிலாசம் , தேசாந்திரி , கேள்விக்குறி ஆகிய கட்டுரைத் தொடர்கள் தொடர்ந்து ஆனந்தவிகடன் இதழ் பிரசுரித்தது .இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்டே இருந்தார். கட்டுரைத் தொடர்கள் அவரின் தொடக்க கால எழுத்து வகைக்குச் சான்று என்றாலும் , அவர் புனைவெழுத்திலும் தன்னைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருந்தார். நூற்றுக் கணக்கான சிறுகதைகள் இடைவிடாமல் எழுதி வந்தாலும். இலக்கியத்தின் அனைத்த
Recent posts

தங்கலான் சுரண்டலின் எதிர்வினை

                                                     ப.ரஞ்சித்தின்                         தங்கலான் திரைப்படம் சுரண்டலின்                                                       எதிர்வினை                  1760 முதல் 1840 வரையிலான ஐரோப்பிய மறுமலர்ச்சி காலக்கட்டத்தில்தான் ஆசிய நாடுகள் பெருவாரியான சுரண்டலுக்குள்ளாக்கப்பட்டன. இந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாட்டுகளில் அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. பலவகையான இயந்திரங்களின் கண்டுபிடிப்புகள் மனித ஆற்றல் பயன்பாட்டை எளிமாயாக்கும் வண்ணம் இயந்திரங்கள் புழக்கத்துக்கு வருகின்றன. அவ்வகை இயந்திரங்கள் மனித பயன்பாட்டுக்காக ஏராளமான எண்ணிக்கையில் தயார் செய்ய வேண்டிய கட்டாயம் நிகழ்கிறது. மேலை நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு இயந்திரங்களை உருவாக்குகின்றன.அவர்கள் உற்பத்திக்கான கனிம பொருட்களின் போதாமையே அப்போது அவர்கள் எதிர்கொண்ட பெரும் சிக்கல். அவர்கள் தேடிய கனிமவலம் நிறைந்த நாடுகளின் இந்திய நிலத்தில் கொழித்துக் கிடப்பதாகக் கண்டிறிகிறார்கள். எனவே ஐரோப்பியர்களில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களே  இந்திய நிலத்துக்குப் படை எடுக்கிறார்கள். இரும்பு தங்கம் பித்தலை ஈயம்

நகரமயமாதலில் பலியாகும் எலிகள்

       நகரமயமாதலில் பலியாகும் எலிகள் (அ.பாண்டியனின் கரிப்புத் துளிகள் நாவலை முன்வைத்து.                                                கோ.புண்ணியவான்            மு ன்னால் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘ பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள் , ஆனால் மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள் ’ என்று சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘ அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் , . நாம் நல்லாத்தான் இருக்கோம்போல ‘ என்று கற்பிதத்தை விதைத்துவிட்டுச் சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதைச் சொன்னவர் ஒரு பேரறிஞர்..தமிழ் கூறு நல்லுலகின் மதிக்கத்தக்க ஆளுமை. இன்றைக்கும் அண்ணா சொன்ன அந்த வரிகள் பொன்மொழிபோல மேடைகளில் கட்டுரைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வார்த்தைகள் மக்கள் திரளை குஷிப்படுத்தவும் கைதட்டல் வாங்கவும் சொல்லப்பட்டவை என்று எளிய மக்கள் அறிந்திருக்கவில்லை. மலேசியத் தமிழர்களின் உண்மை நிலை அதுவல்ல என்று அண்ணாவுக்கே தெரியும் , ஆனாலும் அவர் நெஞ்சரிய சொன்ன பாவனை சொற்கள் அவை. அவர் சொன்ன காலக்கட்டத்தில் மக்கள் தோட்டப் புறத்தில் கொத்தடி