Skip to main content

Posts

Showing posts from December 31, 2017

மாடுகள் மலைகள் ஏரிகள் ~5

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 5 துராங்கியின் அருகே உள்ள  தௌப்பௌ  அருகே உள்ள ஹுக்கா falls பார்த்துவிட்டு தொக்கானு விடுதிக்குப் புறப்பட்டோம். ஊர் இடப் பெயெர்களெல்லாம் மௌரிய மொழிகளிலேயே பெரும்பாலும் உள்ளன.அதற்குக் காரணம் உண்டு. நியூசிலாந்தில் மௌரிகள் என்ற பழங்குடி மக்கள்  இன்றைய கணக்குப் படி 7 லட்சம் பேர் இருக்கிறார்கள். நியூலாந்துக்கு நிலம்  தேடி வாழ  வந்த முதல் இனம் இவர்கள்தான்.      2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹவாயி தீவுகளிலிருந்து கடல் மார்க்கமாக வந்து ஏரிக்கரைகளில் குடியேறியவர்கள் மௌரிகள். அவர்களின் தொடக்க கால பண்பாடுகளில் ஒன்றான கூட்டு நடனத்தை இன்னமும் பாதுகாத்து வருகிறது நியூசிலாந்து.இந்த நடனம் நியூசிலாந்து அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தாகப் படைக் கிறார்கள்.  பெரிய உருவ அமைப்பு கொண்டவர்கள்  மௌரிகள். ஆறடிக்கு மேலாக் உயர்ந்து பீமன் கணக்காய் நிற்கிறார்கள்.   ஆனால் நியூசிலாந்து வெள்ளையர்கள் ஐந்தே முக்கால்  அடி உயரத்துக்கு  குறைந்தவர்களாகவே  இருக்கிறார்கள் .  பழங்குடிகளின் பண்பாட்டு விழுமியங்களை நான் போய் வந்த எல்லா நாடுகளிலும் பார்க்கிறேன். அவர்களுக்கான வாழ்வாதாரம

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 நியூசிலாந்து பயண அனுபவம்.

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 4 ரோத்துருவா அழகிய நீர் வீழிச்சிகள்  உள்ள இடம். மலைகளிலிருந்து திரண்டு வரும் நீர் ஏரிகளில் விழுகிறது. ஓரிடம் என்றில்லாமல் மலைகளின் பல பகுதிகளிலிருந்து விழும் நீர் கண்களைப் பறிக்கிறது. நீர் ஒர் உன்னதக் குணமுண்டு. அகன்று  நிறைந்திருக்கும் ஏரி, கடலாக இருந்தாலும் சரி, திரண்டு இறங்கு நீராக இருந்தாலும் சரி நம் கவனத்தைப் குவிக்கச் செய்து சற்றே அமைதியைக்  கொடுக்கும். நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்கள் பற்றிப் பேசுகிறார்கள். அதில் நீருக்கும் கடவுளுக்கு நிகரான ஓரிடத்தைக் கொடுக்கிறார்கள். ஏன்? நீரின்றி அமையாது உலகம். நீர் இல்லையெனில் இந்தப்பூமிபந்து இல்லை. உயிரினங்கள் இல்லை. வான் சிறப்பில் வள்ளுவன் மேலும் நீருக்கு சிறப்பெய்துகிறான். 'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை'  நீர் உணவு உற்பத்திக்கு உதவியதோடு இல்லாமல் நீரே உணவாகவும் பெய்கிறது என்கிறார்.  அப்படியென்றால் நீர் கடவுள்தானே? அதனைக் கண்கண்ட தெய்வம் என்று ஏன் சொல்லக் கூடாது? ஆகவேதான் நீர் நிலைகள் நம்மை அமைதிப்படுத்துகின்றன. சற்றே நின்று பார்த்து 'தியானி'க்கவும் வைக்கிறது.

மாடுகள் மலைகள் ஏரிகள்.3

மாடுகள் மலைகள் ஏரிகள் ~ 3 நாங்கள் தங்கும் விடுதியெல்லாம் சற்றேறக் குறைய வீடு போன்ற அமைப்பைக் கொண்டது. சமையல் அறை , அதற்கான தளவாடங்கள் , துணி துவைக்கும் இயந்திரம் என பெரும்பாலான வசதி கொண்ட இடம்.  மறுநாள் வெகுதூரம் பயணமாக வேண்டும் . வாய்க்கு ருசியாக உணவு கிடைப்பது கடினம். இடையில் உணவுக்காக நிறுத்தினால் சுற்றுலாத் தளங்களைப் பார்க்க முடியாது.  எனவே காலை உணவு விடுதியிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.  ரொட்டி , சீஸ் , துனா சாடின் , முட்டை , பால் . சீனி , நெஸ்கேப்பி போன்ற உடனடி உணவு வகையை  அன்றிரவே வாங்கிக் கொண்டோம்.  என் மனைவியும் செல்வியும் அன்றைக்கான உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். ரோத்தொருவா எனும் புகழ்பெற்ற நீர்வீச்சி சுற்றுளாத் தளம்  எங்களின் அடுத்த இலக்கு. பகல் உணவு நேரம் நெருங்கும்போது நாம் ஒரு சிறிய பட்டணத்தை அடைவோம் என்றார் மருமகன். நாங்கள் கிளம்பும் போது காலை மணி எட்டு. ஆனால் வேன் சில இயந்திரப் பிரச்னைகளைக் சமிக்ஞை செய்தது. வெகுதூரப் பயணமாதலால் சரி செய்துவிட வேண்டும் என்று அங்குள்ள கிளை அலுவலகத்துக்குச் சென்று சரி செய்து கொண்டோம். அங