Skip to main content

Posts

Showing posts from April 14, 2013

சண்டைக்காரனிடமே சரணடைந்த ஹிண்ட்ராப்

                                                                                                      எதிர்க் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று ‘வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டிருக்கிறது. 2007 ஆண்டு லட்சகனக்கான இந்தியர்கள அணி திரட்டி, ஓரங்கட்டப்பட்ட தென்னிந்தியருக்காக நீதி கேட்டுப் வீதிப் போராட்டம் நடத்திய ஹிண்ட் ராப், ஆறு ஆண்டுகளாகப்  போராடிய பிறகு தன் கோரிக்கைகளை ஆளுங்கட்சியை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. எதிர்கட்சி நாளுக்கு நாள் வலுபெற்று ஆளுங்கட்சியை வீழ்த்தும் நம்பிக்கையில் முனைப்போடு இருக்கும் இத்தருணத்தில் பிரதமர் நஜிப் ‘உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாருங்கள் ஒன்றிணைவோம்’ என்று ‘கரிசனக் கரம்’ நீட்டியிருப்பதானது தன் ஆட்சி நிலை குலைந்திருப்பதைப் படம் போட்டுக் காட்டியிருக்கிறது. இதில் என்ன பெரிய முரண்நகை என்றால் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகாலம் இனவாத அரசாக கோலோச்சி வந்து, இந்தியர்கள் நலனைப் புறக்கணித்த அதே ஆளுங் கட்சி , இன்றைக்கு திடீரெனத் தடம் புரண்டு ‘உங்கள் நலனை நாங்கள் பாதுகாப்போம்’ என்று இன்முகம் காட்டி அரவணைத்திருக்கிறது. இதன் உண்

சொல்றத சொல்லிப்புடுறேன்

ஐநூறு கொடுத்தான்னு  அவனுக்கே ஓட்டுன்னா? ஆயுள் முழுக்க ஒதுக்கனானே  அதுக்கென்ன அர்த்தம்ன்னேன்? நம்மல ஓரங்கட்டி  ஒசத்திப்புட்டான் தஞ்சனத்த  சும்மா தூசுதட்டி போட்டாப்புல  மறந்துப்புட்டான் என் எனத்த  கோயிலுக்கு கொடுத்தான்னு  கையெடுத்து கும்பிடுறியே  சாமியெல்லாம் ஒடச்சப்ப்போ  கைபெசஞ்சி நின்னேல்லா  பள்ளிக்கு தந்தான்னு  பல்லிளிச்சு நிக்கிறியே  இப்பமட்டும் செய்றியேன்னு  எப்பியாவது கேட்டியா? கைக்கட்டி கைகட்டி  காலத்த ஓட்டாத  டைகட்டி மெடுக்கா  இருக்கத்தான் வேணுங்கிறேன்  கொடுத்த தெல்லாம் வாங்கிக்கோ  வேணான்னு தடுக்கல  கோடு போட்ட வாழ்க்கத்தான்  வாழனுந்தான் கேட்டுக்கோ  நம்ம புள்ள நாளைக்கு  நல்லாத்தான் இருக்கனும்னா  நாயக் கட்டி இழுத்தாந்து  நடு வூட்ல வைக்காத  கூழாங்கல்ல தங்கம்ன்னு  கும்பிட்டு ஏற்காத  வைரத்த சோரம்ன்னும்  வந்த வழி அனுப்பாத  எப்பியோ நடந்திடுச்சு  இப்போ அதுக்கென்னாங்கிற  அப்போ செஞ்சதெல்லாம்  இப்பியுமில்ல பாதிக்குது! அரிதாரம் பூசித்தான்  அடுக்கு மொழி பேசுவான்  ஆட்சிய புடிச்சான்னா  அம்புடுத்தான் புரிஞ்சிக்கோ! வக்கனையா எழுதிப்புட்டேன்  வகை வகையா சொல்லிப்புட்டேன்  தொகையெல

மலேசிய அரசியலில் ஒரு அதிரடி மாற்றம்

Mahathir                                                             Abthullaa Badawi                                                        Anwar Ibrahim ( அடுத்த பிரதமராகும் முகம்)                                                                                                            வேதமூர்த்தி(ஹிண்ட்ராப்) 2008ல் மலேசியத் தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்து அசத்தியது. இந்த  மே மாதம் 5ஆம் தேதி நடைபெறப்போகும்       தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி கூட்டணியை வீட்டுக்கு அனுப்பிவைத்துவிடும் கிலியை கிளப்பிவிட்டிருக்கிறது. தேசிய முன்னணியின் அரை நூற்றாண்டு ஆட்சியை அசைத்துவிட்டு இன்னும் ஐந்து ஆண்டில் நீ மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பவேண்டியிருக்கும் என்ற சமிக்ஞையைக் கோடிகாட்டிவிட்டுச் சென்றது. 2008 தேர்தல் எதிர்க் கட்சிகளின் வலுவை கொஞ்சம் ஆழமாகவே பதியவைத்திருந்தது. அரை நூற்றாண்டாக அசைக்கமுடியாத மூன்றில் இரண்டு இடங்களைப்     பெரும்பான்மையில் வென்று வாகை    சூடி அதிகாரத்துவ ஆளுங்கட்சி தேசிய முன்னணி' அத்தேர்தலில் மூன்றி