Skip to main content

Posts

Showing posts from May 30, 2010

தாயுமான மண்

குழந்தைகளுடனான ஓர் உல்லாசப்பயணத்தில் கே.எல்.ஐ.ஏ விமான நிலைய வழவழப்பான மொசைக் தரையில் கால் நனைத்து ஈரக்காற்றின் இதம் சுமந்து புத்ரா ஜயா பிரம்மாண்ட புராதனப்புதுமையில் சுயம் மறந்து பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து அதிசயத்துப் பொங்கி பிரவாகித்து ஏறி வானத்தைத்தொட்டு விதான விசித்திரத்தை முகத்தில் பூசி எல் ஆர் டி விரைவு ரயில் தலயுரசி ஊர்ந்து அதனுடன் பார்வையை நகர்த்தி ஆகாயமாய் உயர்ந்துபோன தாய்மண்ணை வியந்து பின்னர் சீக்ரட் ரெசப்பியில் ஐஸ் கிரீமில் நா குளித்து வெளியேறியதும் பாழடைந்த சேலையில் காதும் கழுத்தும் வெறிச்சோடி முகத்தில் களைப்புச்சோகையுடனான அடி வயிறு மீண்டுமொருமுறை கனத்துத்தொங்க இடுப்பில் இன்னொன்றுடன் சரிந்து பால்வற்றிய புட்டியை உறிஞ்சும் குழந்தையோடு எதற்காகவோ யாருக்காகவோ வெகுநேரம் காத்திருக்கும் அந்தத்தாயின் நினைவே மிஞ்சித்தேங்கியது உல்லாசப்பயணத்தில் Ko.punniavan@gmail.com ஒரு ஏழை புத்தக வியாபாரிக்குக் கடன் தராமல் அலைக்கழிக்க வைத்த முன்னால் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தலைவர் பற்றிய தில்லு முல்லு தகவல் விரைவில் இடம் பெறும் எதிர்பாருங்கள