Skip to main content

Posts

Showing posts from December 29, 2019

பயணக் கட்டுரை 6 : இருபதும் எழுபதும்

6.பிராமி எழுத்தில் என் பெயர் எங்கள் பயணத்தில் கீழடி அகழாய்வப்பற்றித் தெரிந்துகொள்வது முக்கியத் திட்டமாக இருந்தது.அதனால் இங்கே சற்று அதிகமான நேரம் செலவழித்தோம்.  கார் பயணத்தில் எங்களுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டு வந்த பேராசிரியர் வல்லபாய் மதுரையில் சொந்த வேலை நிமித்தமாகச் சென்றுவிட்டார்.மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள முனைவர்கள் விளக்கம் இன்னும் ஆழமாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கும் என்பதால் அவர் விலகிக்கொண்டார் எனப் புரிந்து கொண்டோம். கீழடி ஆய்வில் மிக முக்கியமான ஒரு விடயம் அங்கே கடவுள் நம்பிக்கை இருந்ததற்கான எந்த ஆய்வுப் பொருளும் கிடைக்கவில்லை என்கிறார்கள் ஒரு சாரர். எனவே மத நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் நிறுவுகிறார்கள். இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அப்போது வாழ்ந்தவர்கள் பகுத்தறிவு உள்ள சமூகமாக வாழ்ந்தார்கள் என்று ஒரு கருதுகோல் உண்டு. ஆனால் சங்ககால இலக்கியங்கள் ஐந்தினைகள் பற்றிக் கூறுகின்றன.  ஐந்தினைகளில் கடவுள் வணக்கம் இருந்திருக்கிறது என்பதால் அப்போது வாழ்ந்த மக்கள் இறை வழிபாட்டு முறைகள் இருந்திருக்கக் கூடும்.   குறிஞ்சித் திணை முருக வழி

பயணக் கட்டுரை 5 : இருபதும் எழுபதும்.

5. கீழடி நிலப்பகுதியும் மதுரைத் தமிழ்ச்சங்கமும் தஞ்சையிலிருந்து மதுரைக்கு   நெடு நேரப் பயணம் .  பயணம் செய்த எங்களுக்கே களைப்பு உடலை வருத்தியது என்றால் ஓட்டுனரின்  நிலையை ச் சொல்லவே ண் டியதில்லை . ஆனாலும் கீழடியைப் பார்க்காமல் அந்த நாள் நிறைவு பெறாது . கடந்த ஓராண்டாக க்   கீழடி பற்றிய அகழ்வாராய்ச்சி த் தகவல்கள் பிரமிப்பை உண்டாக்கிய வண்ணமிருந்தன . எனவே உள்மன எழுச்சி கொண்டு எங்களை உந்தித் தள்ளியபடி இருந்தது கீழடி . முதலில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் இருக்கும் அகழ்வாராய்ச்சிப்   பொருட்களைக் காணச் செல்வதா அல்லது அகழ்வாராய்ச்சி நடந்த நிலத்தைப் பார்க்கச் செல்வதா என்று முடிவெடுக்க முடியாமல் இருந்தோம் . பேராசிரியர் வல்லபாய் (டாக்டர் மிமியின் தந்தை) நிலத்தை முதலில் பார்க்கலாம் என்றார் . சிலர் அங்கே   அகழ்ந்தெடுத்த அடையாளமே இல்லை, இப்போது   பார்க்க என்ன இருக்கிறது என்றனர் . குறைந்தபட்சம் அந்த மண்ணில் எங்கள் பாதம் படவேண்டும் என்ற அவா நீர்க்குமிழிபோல தீர்ந்துவிடாமல் இருந்தது .   ஹரி , நான்,மிமி,பேராசிரியர் கிட்டதட்ட