Skip to main content

Posts

Showing posts from October 9, 2011

எதிர்வினைகள் - பிறிதொருவர் பார்வையில்

கோ . புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளிப்பற்றிய ஒரு பார்வை . புண்ணியவானுக்கு நன்றாகக் கதைச் சொல்ல வருகிறது . இவரது கதைகளுடன் எனக்குள்ள இருபது வருடப் பரீட்சயத்தில் கண்டடைந்த முடிவு   இது . ஒரு கதைச் சொல்லிக்கு சரியான விஷயத்தை தேர்வு செய்வது மட்டும் போதாது ; சரியாக அதைச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும் . அவன் எழுத்தாளனாகப் பரிணமளிப்பது அப்போதுதான் சாத்தியமாகிறது . கோ . புவுக்கு இந்தச் சமுதாயத்தைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை உள்ளது . அதன் இறுக்கங்களையும் , உள்ளடுக்குகளில்   மறைந்து கொண்டு மனதை ரணப்படுத்தும்   சமூகப் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் தெளிவான சிந்தனையும் , அதற்கு ஈடான படைப்பூக்கமும் , மொழி ஆளுமையும் ஒருங்கே அமைந்துள்ளது .             எழுத்தாளன் சாதாரண விஷயங்களில்   பதுங்கிச் சொல்லும் அசாதாரணமான கணங்களை படைப்பினுள் கொண்டுவருகிறான் . இத்தொகுப்பில் உள்ள பல கதைகள்   சாதாரணமான விஷயங்கள்தான் . வாழ்வின் சகல அவலங்களும் , சிறுமைகளும் , ஊதிப் பெருக்கிய ப