வாராந்திர இதழாக குமுதம் இதழ்களின் வழியேதான் நான் கதை வாசிக்கத் துவங்கினேன். குமுதம் இதழ்களை நான் கடையில் வாங்கியது மிகக்குறைவு . ஏனெனில் நான் வளர்ந்த தோட்டத்தில் ஜனரஞ்சக வாசகர் ஒருவரிடமிருந்தே குமுதமும் ஆனந்தவிகடனும் கல்கண்டையும் பெற்றுக்கொண்டு வாசித்தேன். இப்படி ஓசியில் வாசிப்பது எனக்கு மிகச் சுவாரஸ்யமான அனுபவமாகும். தமிழகத்திலிருந்து கிட்டதட்ட இரண்டு வாரம் கழித்தே அவருக்குக் குமுதம் கிடைக்கும். அவர் படித்து முடிக்க மூன்று நான்கு நாட்கள் ஆகிவிடும். அதை நான் போய் அவரிடம் இரவல் பெறக் காத்திருக்கும் தருணத்தைத்தான் கொஞ்சம் படபடப்பானது என்று சொல்வேன். இதழை அவரிடமிருந்து இரவல் வாங்குவதிலிருக்கும் படபடப்பைவிட அதில் இருக்கும் சிறுகதைகளும் அது என்னை அலைக்கழிக்கப்போகும் திடீர் திருப்பங்களுமே என்னை நிலைகொள்ளாமல் செய்துவிடும். அங்கிருந்துதான் எனக்கு வாசிப்புப் பழக்கம் உருவானது என்று சொல்லலாம். கையில் காசில்லாதவர்கள் ஓசியில் படிப்பது தப்பில்லை என்றே வாதிடுவேன். கற்கை நன்றே..பிச்சைப் புகினும்! நான் கேட்கும்போதெல்லாம் இரவல் கொடுப்பதில் அவர் முகம் கோணியதில்லை. ஏனெனில் கதைகளையு
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)