Skip to main content

Posts

Showing posts from October 28, 2012

இந்தியர்களின் வாக்கு வேட்டைக்காக நஜீப்பின் அரசியல் வியூகம்

                                                 Najib                                        Anwar                இன்றைய மலேசியப் பிரதமர் நஜிப் முந்தைய பிரதமர்களைவிட சற்று வித்தியாசமானவர். எந்த நேரத்திலும் நாடு எதிர் நோக்கியிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற அவர் எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் முந்தைய எந்தப் பிரதமரும் சந்தித்திராதது. 2008க்குமுன்னர் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தை எளிதில் கைப் பற்றி ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்திக் கொண்டது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறு வடிவம் கொண்டு அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது.                       முந்தைய காலங்களைவிட தற்சமயம் எதிர் கட்சிகள் குரல் ஓங்கியிருப்பதே காரணம். எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலில் ஜெயிப்பதற்கான அரசியல் வியூகமும் முன்னகர்வும் பிரதமரை மிகுந்த கவலைக் குள்ளாக்கியிருக்கிறது. அதனாலேயே அவர் தன் அரசாங்கத்தின் மரபான இனவாத அரசியல் பாணியைக் கைவிட்டு ‘எல்லாருக்கும் எல்லாமும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொண்டு கவனமாகக் காயை நகர்த்தியபடி இருக்கிறார். 2008ல் நடந்து முடிந்த தேர்தலுக

இந்த முறை இந்தியர்களின் ஓட்டு யாருக்கு?

                     இரண்டு வாரங்களுக்கு முன்னால் முன்னால் தமிழாசிரியர்கள் மாநாடு நடந்தது. நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்த துணையமைச்சர் வரவில்லை.ம.இ. கா காரர்.  அவருடைய பிரதிநிதியாக  பினாங்கின் முக்கியமான தலைவராக இருக்கும் கிருஷ்ணன் வந்திருந்தார்.            அவரை உரையாற்ற அழைத்தார்கள்.  நாடு தேர்தல் காய்ச்சல கண்டிருந்த சமயத்தில் அரசியல் வாதிகள் கிடைக்கும் மேடை வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தெரிந்த விஷயம்தானே.            அவரும் அதற்கு விதிவிலக்கல்ல.             இன்றைக்கு பிரதமர் இந்தியர்களுக்கு கேட்டதெல்லாம் கொடுக்கிறார். முன்பு போலல்ல. 2008ல் நடந்த ஹிண்ட்ரப் புரட்சி நல்ல பலன்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அது போன்ற புரட்சி நடந்திராவிட்டால் இந்தியர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே தொடர்ந்து நடத்தப் பட்டிருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார். ( மலேசியா ஒரு இனவாத நாடு. இனப் பாகுபாட்டைச் சட்டப் பூர்வமாகவே அமலாக்கம் செய்யும் சாதூர்யத்தை இங்கே காணலாம்.கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாலாய்க்காரர்களுக்கான் சிறப்பு சலுகைகளைக் கேள்வி முறையின்றியே செய்து வந்தார்கள். இன்னமும் தொ