Najib Anwar இன்றைய மலேசியப் பிரதமர் நஜிப் முந்தைய பிரதமர்களைவிட சற்று வித்தியாசமானவர். எந்த நேரத்திலும் நாடு எதிர் நோக்கியிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற அவர் எதிர் நோக்கியிருக்கும் சவால்கள் முந்தைய எந்தப் பிரதமரும் சந்தித்திராதது. 2008க்குமுன்னர் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தை எளிதில் கைப் பற்றி ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்திக் கொண்டது. ஆனால் இன்றைய நிலை முற்றிலும் வேறு வடிவம் கொண்டு அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. முந்தைய காலங்களைவிட தற்சமயம் எதிர் கட்சிகள் குரல் ஓங்கியிருப்பதே காரணம். எதிர்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் தேர்தலில் ஜெயிப்பதற்கான அரசியல் வியூகமும் முன்னகர்வும் பிரதமரை மிகுந்த கவலைக் குள்ளாக்கியிருக்கிறது. அதனாலேயே அவர் தன் அரசாங்கத்தின் மரபான இனவாத அரசியல் பாணியைக் கைவிட்டு ‘எல்லாருக்கும் எல்லாமும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொண்டு கவனமாகக் காயை நகர்த்தியபடி இருக்கிறார். 2008ல் நடந்து முடிந்த தேர்தலுக
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)