Skip to main content

Posts

Showing posts from November 15, 2009

நேற்றைய தொடர்ச்சி.........

இன்றைக்கு மலேசியக் கல்விச் சான்றிதழில் (ம.க.சா) (SPM) மாணவர்கள் தமிழ் இலக்கியப்பாடத்தைச் சோதனையில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2012ல் பத்து பாடங்களுக்கு மேல் எடுக்கக்கூடாது என்ற அரசின் புதிய ஆணை தமிழ் இலக்கியப்பாடத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது. இதற்கு முன்னர் ஒரு மாணவர் எத்தனை பாடம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றிருந்தது. அத்திட்டத்தின் வழி இலக்கியபாடத்தைச் சோதனையில் எடுக்க பல ஆயிரம் மாணவர்கள் முன்வந்தார்கள். ஆசியர்களும் பொது இயக்கங்களும் அதற்காகப்பாடுபட்டன. இன்றைக்கு அமல்படுத்தப்பட்டுவரும் சட்டம், முன்பு இல்லாத நிலையில் தமிழ் இலக்கியம் எடுப்பது சாத்தியமானது. இதற்கு முன்னர் இருந்த திட்டத்தின்படி பெருவாரியான சீன இன மாணவர்கள் மலாய்க்கார மாணவர்களைவிட அதிகப்படியான மதிப்பெண்கள் பெற்று தங்கள் மேதைமையை நிரூபித்திருக்கிறார்கள். பின்தங்கி இருக்கும் மலாய்க்காரச் சமூகத்தைக்கைதூக்கிவிட அவர்களுக்குத்தரப்படும் பிரத்தியேக கல்விமுறைக்கு சவால்விடும் வண்ணம் சீன இன மாணவர்களில் சோதனை முடிவுகள் அமைந்துவிடுகின்றன. பெரும்பான்மையில் இருக்கும் மலாய்க்கார மாணவர்களைவிட எண்ணிக்கையில் அடுத்த நிலையில் இ

எல்லாவற்றையும்விட தமிழனுக்குத் தமிழ்மொழிதான் ஆகக்கடைசித்தேர்வு

சம்பவம் 1 ஒரு நாள் தேனீர்கடையில் இருவர் உரையாடலைச் செவிமடுத்தபடி அமர்ந்திருந்தாராம் நண்பர் ஒருவர். அவர்களின் போதாத காலம் செவிமடுத்துக்கொண்டிருந்த நண்பர் தமிழ்ப்பற்று(வெறி) உள்ளவர். தமிழ் மொழியால் ஏற்படும் பின்னடைவுகள் பற்றிப்பேசப்படும் தருணங்கள் வெகுண்டெழுந்துவிடுவார். யார் பேசுகிறார் எங்கே பேசுகிறார் என்றெல்லாம் பார்க்கமாட்டார். கடையில் பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் தமிழ்மொழி கற்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றிப்பேச, பிறிதொருவர் அதனால் உண்டாகும் தேக்கங்கள் , வனிக ரீதியிலான பின்னடைவுகள் பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். தர்க்கங்கள் வெப்பமேறிக் கொண்டிருந்த வேளையில்,”தமிழ் சோறு போடுமா?” என்ற தமிழ்மொழியைக் கேவலப்படுத்தும் வினாவை முன் வைக்க உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தவர் தடாலடியாகப்பாய்ந்து,” உனக்குச் சோறுதான வேணும் இந்தா தின்ரா” என்று தன் மேசையில் உள்ளதை எடுத்துக்கொடுத்திருக்கிறார். “ன்னும் வேணும்னா சொல்லு ஆர்டர் பண்றேன்,” என்று காத்திரமான முறையில் யானை பாத்திரக்கடையில் புகுந்ததுபோல உரையாடலின் இடையில் புகுந்தாராம். ஒரு அறிஞர் இதே வினாவுக்கு அறிவார்ந்த முறையில் பதில் கூற

வழியனுப்பு

எல்லாமும் முடிந்தபின்னர் வெறும் நன்றி கூறி வாழ்த்துச்சொல்லி கட்டியணைத்து கண்ணீர் உகுத்து அஞ்சலிபாடி கடைசியாக சரித்திரமாக்கிவிடுகிறோம் வெட்கமில்லாமல் கோ.புண்ணியவான் ko.punniavan@gmail.com