Skip to main content

Posts

Showing posts with the label வெனிஸ் என்னூம் நீரூர்-முத்தம் 13

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 14

  வெனிஸ் என்ற நீரூர் -முத்தம் 14 ப்ராண்சியாவில் காத்திருந்த தருணம் சாய்ந்த பைசா கோபுரத்தைச் சாய்ந்து சாய்ந்துதான் பதிவு செய்துகொண்டிருந்தோம். உலக அதிசயங்களைப் பார்க்கும் கூட்டம் குறையவே இல்லை. அதிலும் பைசா கோபுரம் மிக விநோதமான ஒன்று. சாய்ந்த எப்போதோ விழுந்திருக்க வேண்டிய ஒன்று. அதன் சாய்வை நிறுத்தி கட்டுமான தொழில்நுட்பத்தில் வரலாறு படைத்த விநோதம் நிகழ்ந்தது அங்கே.. அவ்வளவு சாய்ந்துதிருந்தும் வரலாற்று அடையாளத்தை  நிலை நிறுத்த வேண்டி எத்துனையோ சிரமத்துக்குப் பிறகு அதன் சாய்வை நிறுத்தி வைத்த மனித மூளையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஏ மானுடா, ஒரு பிரச்னை வந்ததும் துவண்டு  சாய்ந்துவிடாதே, சாய்ந்த இடத்திலிருந்தே உன் சாதனையைத் தொடங்கு என்ற குறியீடாக, படிமமாக, தொன்மமாக கல் கட்டடம் ஒன்று  உலக மாந்தருக்குப் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறது பைசா கோபுரம். "இனி மேலும் சாய்வதாய் இல்லை, என்னைப்பார்," என்று நமபிக்கையின் உரத்த குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பைசா கோபுரத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மழை சட சடவென் இறங்கியது. குடை விற்பவர்கள் முகம் நம்பிக்கையோட...