(ஏர் ஆசியா பற்றி ஒரு கொசுறு செய்தி. சிக்கனச் சேவை என்ற பெயரில் பயணிகள் பணத்தின் மேல் குறி வைக்கும் உத்தி பற்றிய செய்தி இது. நான் அனுபவித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது) 4.ஏற்காடு மலைக்குளிரும் இலக்கியச் சாரலும். ஏற்காடு விடுதி இந்தப்பயணம் மிகக் கடுமையான பயணமாக இருக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன். கடந்த ஆண்டு கலந்துகொண்ட ஊட்டி இலக்கியச் சந்திப்பின் இனிமையான நினைவுகள் ஆறுவதற்கு முன் இந்த ஆண்டு இன்னுமொரு இலக்கிய முகாமுக்கு ஏற்காடு பயணப்பபட்டோம். இலக்கியம் எங்களுடைய ஆன்மாவில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்று. அதிலும் ஜெயமோகன் குழுமத்தின் ஏற்பாடு. சொட்டச் சொட்ட இலக்கியம் மட்டுமே பேசி, விவாதித்து, சண்டையிடும் ஒரு கொண்டாட்ட நிகழ்வு என்பதால் அதன் ஈர்ப்பிலிருந்து விடுபட முடியாது. அங்கே பிரமுகர், மாலை மரியாதை, போலிப் பாராட்டு, பரஸ்பர முதுகு சொரிதல் மேடை, நாற்காலி ஒன்று கிடையாது. தரையில் விரித்த பாயில் உட்கார்ந்துதான் இலக்கிய விமர்சனக்கள் விவாதங்கள் நடக்கும். ஜெ
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)