Skip to main content

Posts

Showing posts from November 13, 2011

காலணிகள்

காலணிகள் கடைவீதிகளில் கணக்கில்லா காலணிகள் எதை வாங்குவது ? மாளிகை வாசலில் பள பளக்கும் வண்ணங்களில் பல நூறு செருப்புகள் அவள் காதணிக்கு எது எடுபடும் ? உயரத்துக்கு எது சரிபடும் ? தேர்வு செய்யவே ஒரு அழகுக்கலை நிபுணர் நடிகை ஏவலுக்கு . திருமதி மார்க்கோஸ் இரண்டாயிரம் வகை காலணிகள் பாரிஸ் ஷூ கோனரிலும் பல நூதன நகரங்களின் பந்தா கடைகளிலும் பார்த்து வாங்கியதாம் கல்யாண விருந்தின் காலணிக்கு அறை மாதமாய் அலைந்தும் அகப்படவில்லை ஒன்றும் செருப்பில்லா கால்களுக்கு சிறப்பேதும் உண்டா பாதங்களை இழந்தவனுக்கு பாதுகை பெரிதில்லைதான் பாதமே பெரிது இவருக்கு நாய் குதறிய காலணிகளும் மிஞ்சவில்லை ஜோடி பிரிந்ததும் வாய்ப்பில்லை ஆயிரமாயிரம் காலணிகள் அலங்கரிக்க கால்கள் இருக்க பாதுகை பாராத பால்லாயிரம் கால்களின் பிரதிநிதிக்கும் ஒரு ஜோடிக் கால்கள் இவை இருள் கவிந்த உலகத்தை இதயம் இருக்கா என்று வினவும் கால்கள் இவை மனிதம் மரத்துப்போனதால் மறக்கப்பட்ட கால்கள் இவை சிம்மாசனம் ஏறிய பாதுகைகளில் மிதிபட்டு சின்ன ஆசனம் கிடைக்காத கால்கள் இவை

தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்

                      நன்றி (படங்கள் வ. முனியன்) (சிங்கப்பூரில் கடந்த 28,29.30 அக்டோபரில்(2011) நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முன்வைத்து)          இலக்கிய வளர்ச்சியின் அடுத்த கட்ட பரிமாணத்தை அடையவும்,  தமிழர் புலம் பெயர்ந்த இடங்களில் இலக்கியம் சார்ந்து நடக்கும்  வளர்ச்சியை அல்லது மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்  சமீபத்தில் சிங்பப்பூர்த்தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தாயகம் கடந்த தமிழ்    கூட்டியது. கனடா, சிரிலங்கா, ஆஸ்திரேலியா,ஜெர்மனி,பிரான்ஸ்,  அமெரிக்கா பிரிட்டன் இந்தியா, சிஙக்ப்பூர், மலேசிய போன்ற  நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். கட்டுரையாளர்கள்  மேற்குறிப்பிட்ட நாடுகளின் இலக்கிய  , வளர்ச்சியும் அதன் போரட்டங்கள் குறித்தும் கட்டுரைகள் படைத்தனர்.        தமிழர்களின் தாயகம் என்பதற்கான பொருள் இந்தியாவாகவே இருக்கிறது என்பதாகவே கருப்பொருள் சொல்கிறது. ஆனால் எத்தனையோ தலைமுறைகளைத் தாண்டிய புதிய சமூகம் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தலையெடுத்துவிட்டது. இனியும் இந்தியாதான் தாய்நாடு என்று சொல்வதில் உள்ளார்ந்த பொருள் இருக்கமுடியாது. துக்கணூண்டு உணர்வு சார்ந்த பற்