Skip to main content

Posts

Showing posts from August 4, 2013

பேரமைதியைக் கொல்லும் பெருங்குரல்

                                                             கவிஞர் பாலு மணிமாறன் சிங்கப்பூர் பாலு மணிமாறனின் காதல் கவிதைகளை முகநூலில் படிக்கும் போதெல்லாம் எனக்கு வயதானதே ஒரு கணம் மறந்துபோகிறது. என்னை மட்டுமல்ல காதல் எல்லாருக்குமே இளமையை நினைவு படுத்துகிறது- ஆமாம் படுத்துகிறது. நான் நினைப்பேன் காதல் தோல்வி காணும்போதுதான் அது சாகாவரம் பெறுகிறது என்று. காதலில் ‘வென்றவர்கள்’ பாவம் கல்யாணம் ,  குடும்பம் என்ற சாகரத்தில் போய் விழுந்து எதிர் நீச்சல் போட முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதனால்தான் காதல் , கால்யாண ஆப்கானிஸ்தான் எல்லையைத் தொடக்கூடாது என்று சொல்கிறேன். கல்யாணம் செய்யாமல் வாழ முடியாதே என்று யாரோ சிலர் எதிர்வினையாற்றுகிறார்கள். காதலர்களாக இருந்தவர்கள் கல்யாணத்துக்குப் பிறகு அதிகாரமும் அகம்பாவமும் பிடிவாதமும் நிறைந்து காதலைக் கசக்கி எரிந்துவிடுகிறது என்று வாக்குமூலம் தருகிறார்களே!.  காதல் இல்லை என்றால் வாழ்வே அர்த்தமற்றதாகிவிடும் என்று நான் சொல்வேன்.. காதல் இல்லாமல் எத்தனைத் திருமணங்கள் ‘திரு’வை விவாகரத்து செய்து ‘மணமற்றுப்’போய்விட்டன! கால்யாண மாலைகள் எத்தனை ‘கருகி’விட