Skip to main content

Posts

Showing posts from December 24, 2017

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2 கோல்ட் கோஸ்டில் என்ன மணி என்று தெரியவில்லை.  நேரம் தெரியாமல் இருப்பதுதான் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிறது. ஆம் நாங்கள் உல்லாசமாக இருக்கத்தானே புதிய ஊரைத் தேர்ந்தெடுத்தோம்.  நியூசிலாந்து நேரத்துக்கு மணியை மாற்றியும் வைக்கவில்லை . அவர்களுக்கும் நமக்கும் ஐந்து மணி நேர வித்தியாசம்.  நமக்கு இங்கே காலை ஆறு என்றால் அங்கே பதினொன்று. அது ஒன்றரை மணி நேர நிறுத்தம். கோல்ட் கோஸ்ட்டில் இறங்குபவர்களுக்காக மட்டுமல்ல . பெட்றோல் நிரப்பவும்தான். அங்கே எல்லாப் பயணிகளும் சுங்கப் பரிசோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள. போதைப்பொருள் , ஆயுதக் கடத்தல் நடக்காமல் இருக்க இந்தப் பரிசோதனை. போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை என்று  எச்சரிக்கிறார்கள். கோல்ட் கோஸ்ட்டில் சுங்கச் சாவடியில்  பொருள் வாங்கலாம், காப்பி அருந்தலாம் ஆனால் அமெரிக்கன் டாலர் கேட்கிறார்கள். நியூசிலாந்து பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆங்கிலமும் டாலரும் உலகத்தை அடிமையாக்கி விட்டிருக்கிறது. மீண்டும் விமானத்துக்குள் நுழைந்தால் புதிய பணிப்பெண்கள் மலர்ந்த பூக்களாய் நின்று

மாடுகள் மலைகள் ஏரிகள்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 1   நியூ  சிலாந்து செல்வதற்கான முன்னேற்பாடுகள் ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே தொடங்கிவிட்டது. டிசம்பர் 12 தொடங்கி 24 வரையிலான சுற்றுலா. ஆனால் இரண்டு நாட்கள் பயணத்திலேயே கழிந்துவிடும். விமானப் பயணம் பதினொரு மணிநேரம். கெடாவிலிருந்து காரில் கே.எல் .ஐ ஏ விமான நிலையம் செல்வதற்கு ஐந்து மணிநேரம் , விமான நிலையத்தில் சுங்கச் சாவடிக்காக காத்து நின்று எல்லா பரிசோதனையும் முடிய மூன்று மணி நேரம் ,  விமானப் பயணம் பதினோரு மணி நேரம் , ஆக்லாந்து விமான நிலையத்தில் குறைந்தது முக்கால் மணி நேரம் என களைத்துப்போய் விடுதி கட்டிலில் சாய  கிட்டதட்ட  ஒருநாளை விழுங்கிவிடும். ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செல்லும் போது இந்தியா தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளொம்போது உண்டாகும் பதற்றம் ஏற்படுவதில்லை. இந்தியாவில் திருச்சி , டில்லி , சென்னை விமான நிலையங்களில் சுங்கச் சாவடி பரிசோதனைகள் நம்மை சாகடித்துவிடும். அதனால்தான் அதற்குப் பெயெர் சாவடி. திருச்சி விமான நிலையத்துக்குள் நுழைவாயிலில் நீங்கள் முதலில் வரிசை பிடித்து நிற்க வேண்டும். கோடை காலக்  கொடுமைமைகள