Skip to main content

Posts

Showing posts from April 28, 2013

வாக்குரிமை வாக்காளருக்கே உரியது வெற்று வேட்டுக்கு அஞ்சவேண்டியதில்லை!

                 (கோ.புண்ணியவான்) நமக்குள் திணிக்கப் பட்ட அச்ச உணர்வு காலங்காலமாய் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது. அது அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க உணர்வு. எத்தனையோ ஆயிரம் ஆண்களுக்கு முன்னாலிருந்தே நமக்குள் இது பதிந்து போய் மரபான தொடர்ச்சி பெற்று இன்றைக்கும் அதன் சிதலங்களால் பாதிக்கப் பட்டு வருகிறோம். ரொம்பவும் பின்னால் போக வேண்டாம். ஒரு இரண்டு நூற்றாண்டின் வரலாறை மட்டும் திரும்பிப் பார்ப்போம். பண்ணியார், எஜமானர், துரை, கிராணி, மண்டோர் என்ற அதிகார வர்க்கத்தின் கரம் நம் மென்னியை அழுத்திய வண்ணமே இருந்திருக்கிறது, இப்போது அம்னோ. இவைகளெல்லாம் நமக்கு வலிக்காமல் அச்சத்தை நம்முள் ஊடுறுத்தி வந்திருக்கின்றன.  பலரிடம் பேசியபோது தேர்தலில் அதிகார வர்க்கத்துக்கு வாக்களிப்பது ஆபத்தில்லாதது என்ற மனநிலையே பலரிடத்தில் என்னால் பார்க்கமுடிந்தது. “யாருக்கு வாக்களிப்பீர்கள்?” என்று பலரை நான் கேட்டேன். அவர்களில் பெரும்பான்மையினர் இன்றைக்கும் இருக்கும் ஆட்சியாளருக்குத்தான் என்றே   உறுதிதாக இருக்கிறார்கள். “இந்த முறை எதிர்க் கட்சிக்கு போடுங்களேன்.” என்றேன். “கண்டு பிடிச்சிற மாட்டாங்களா?” “கண்