Skip to main content

Posts

Showing posts from May 22, 2022

சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள். பயணக் கட்டுரை

சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகளின் கீச்சொலிகள் பயணக்கட்டுரை 2. நான் தேசிய நூலக வாசலை அடைந்தபோது சுந்தரராசு அங்கில்லை. சற்று நேரம் காத்திருந்துவிட்டு நூலகத்தின் 5 வது மாடிக்கு போய்விட்டேன். இன்பா என்னை அடையளம் கண்டுகொண்டு வரவேற்றார். மாலை 5.30க்கெல்லாம் பாதி மண்டபம் நிறைந்துவிட்டிருந்தது. நண்பர் அலைக்கழிவாரே என்று நினைத்து மீண்டும் கீழ் தளத்துக்கு ஓடிவந்தேன்.இரண்டாவது மாடியிலிருந்து பார்க்கும்போதே அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்துகொண்டிருப்பது தெரிந்தது. என்னிடம் சிங்கப்பூர் எண் இல்லை என்று அவருக்குத் தெரியாது. கீழே இறங்கி சந்தித்தேன். "நா ரெண்டு வாசல்லியும் போய் பாத்துக்கிட்டெ இருந்தேன் " என்றார் படபடப்போடு. எதிர்ப்புறம் இன்னொரு நுழைவாயில் இருந்ததை அப்போதுதான் கவனித்தேன்.  சிங்கப்பூர், சிறிய ஊராக இருந்தாலும் நூலகங்களின் எண்ணிக்கை  20 க்கு மேல். ஒவ்வொரு நூலகத்துக்கும் தமிழ் நூல்கள் தலா இரண்டு வாங்கப்படுகின்றன. என் 'செலாஞ்சார் அம்பாட் ' நாவலும் 'கையறு'வும் அங்கே வாசிக்கக்கிடைக்கும். மலேசியாவில் எப்படி என்று கேட்கிறீர்களா? வேண்டாம் எதற்கு

சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள். பயணக் கட்டுரை

சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள். பயணக் கட்டுரை பயணக் கட்டுரை              21.5.2022 கா லை 4.30 மணிக்கு சிங்கப்பூர் பயணத்துக்கான் டிக்கட் கையில் கிடைத்தபோது  மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.  இலக்கியம் சார்ந்தது அந்தப் பயணம் என்பதால் உண்டான பரவசம் அது. கோவிட் காலத்தில் அனைத்துலகக் கதவுகள் மூடப்பட்டு பயணம் தடைபட்டது பயண விரும்பிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவு, பயணம் மீண்டும் சாத்தியமானபோது ஆர்வம் கொப்பளித்தது.  ஆனால் அந்தப்பயணத்துக்கான நாள் நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகரித்தது. ஏனெனில் 4.30 மணி பறத்தலுக்கு காலை 2.30 மணிக்கே விமானத் தளத்தில் போய் நின்றுவிடவேண்டும். அத்தனை கருக்கலில் எழுவது என்பது என் வழக்கத்துக்குச் சாத்தியப்படாத ஒன்று. எனக்கு ஒவ்வோரிரவும் காலை 4.00 மணி தொடங்கிய பிறகுதான் உறக்கமே வரும். நான் சியாட்டிகா என்ற முதுகெலும்பு நகர்ச்சி நோயில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். இந்த நோய் வலி பகலெல்லாம் வந்து தொலைந்தால் பாரவாயில்லை. ஆனால் நள்ளிரவுக்குப் பிறகு தன் நாட்டியத்தைத் தொடங்கி 4.00 மணி வரை இழு பறியில் இருக்கும். எங்கே தூங்குவது. நான்கு மணிக்கு மேல் என்னைப்பீடித்த அந்தப் பேய்