கவிஞர் மணிமாறன் கவிஞர் தேவராஜன், தலைவர் ராஜேந்திரன் ஊக்கச் சக்தி முனைவர் முல்லை சமூகச் சிந்தனையாளர் ராமேஸ்வரி ஏற்பாட்டுக் குழுத் தலைவி செண்பகவல்லி தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது என்னைப்போன்ற படைப்பாளனுக்கு உவப்பான விடயம். அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலக்கிய வீதியில் காலாற நடக்க சாத்தியமாகியிருக்கிறது இப்போதெல்லாம். படைப்பாளன் தளம் எங்கே நிறைவுறுகிறது என்றால் வாசிப்பில் தொடங்கி, அகவயப் பார்வையில் தொடர்ந்து, எழுத்தில் திளைத்து பின்னர் விமர்சனத்தில் அல்லது குறைந்தபட்சம் புறத்தே நோக்கி பார்க்கும் பார்வையில் முடிகிறது. இதில் சுயவிமர்சனம் எழுத்தாளனுக்கு மிக அவசியம். தன் படைப்பைச் சுயமாக விமர்சனம் செய்துகொள்வதிலும் , அதில் காணும் குறைகளைக் கடந்து வருவதிலும் அவனின் இலக்கிய வாழ்வு முழுமையடைகிறது என்று சொல்வேன். இலக்கிய நிகழ்வுகளில் பாசாங்கு போக்கு ஆங்காங்கே தலை காட்டினாலும் , இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில் இலக்கை அடைந்தோமா எ
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)