1. ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் , கரிகாற்சோழன் விருதும் . தமிழ் படைப்புலகம் தமிழ் வாசகர்களுகுள்ளேயே தேங்கிவிடுகிறது என்ற குற்றச்சாட்டை பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் கருத்தாகவே இருக்கிறது.அது மறுக்க முடியாத உண்மையுங்கூட.ஐரோப்பிய ருஷ்ய ஆப்ரிக்க இலக்கியங்கள் பரந்த எல்லையைத் தொட்டு உலக விருதுகளை வென்று விடுகின்றன. பொதுவாகவே விருதுகள் பெற்ற இலக்கியங்கள் பேசப்படுகின்றன. அதனைவிடவும் சிறந்த படைப்பிலக்கியங்கள் மொழிபெய்ர்ப்பு செய்யப்படாத காரணத்தால் தமிழின் தரமான படைப்புகள்கூட அனைத்துல வாசகப் பரப்பை எட்டாமல் அது அடையவேண்டிய அந்தஸ்தை அடையாமல் தேங்கிவிடுகின்றன. ஜெயமோகன் போன்ற ஆளுமைகளுக்கு நியாயமாகத் கிடைக்கவேண்டிய அந்தஸ்து கிடைக்காமல் போவதற்கு இதுதான் முக்கிய காரணம். அறம், யானை டாக்டர் போன்ற சிறுகதைகள் சமீபமாகத்தான் அனைத்துல இலக்கிய அரங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன காரணம் அவை தகுதியுள்ளவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரந்துபட்ட வாசிப்புக்குப் போயிருக்கிறது. சமீபத்தில் நடந்த GTLF அனைத்துல ஜோர்ஜ் டௌன் விழாவில் ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் ஜெயமோகனிட...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)