Skip to main content

Posts

Showing posts from December 13, 2009

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.) கோ.புண்ணியவான் நேற்றைய தொடர்ச்சி........ மனிதர்கள் அணிந்து திரியும் எண்ணற்ற முகமூடிகளும் இந்த உலகம் ஒரு நாடகமேடை,நாமெல்லாம் அதன் நடிகர்கள் என்கிறார் அறிஞர் ஷேக்ஸ்பியர்.என்ன தீர்க்க தரிசன நடப்பியல் உண்மை.நம்முடைய குணத்தை, உற்று கவனித்தால் நாம் எத்தனை பெரிய நடிகர்கள் என்று புரியும்.நாம் எப்போது அசலான நாமாகிறோம், என்று மனசாட்சியை கேட்டுப்பார்த்தால் அநேகமாக பதில் கிடைக்காது.மனசாட்சியும் குழம்பிய நிலைக்கு உள்ளாகும்.எல்லாரும் கண்ணுக்குப்புலப்படாத ஆயிரக்கணக்கான முகமூடிகளை வைத்துக்கொண்டு சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாற்றி மாற்றி அணிந்துகொண்டு திரிகிறோம். சுயநலமிகளின் உலகமல்லவா இது! வேறெப்படி இருக்கும்? வேலைக்குச்செல்லும்போது நண்பர்களைச்சந்திக்கும்போதும் உறவினர்களைத் திடீரெனச்சந்திக்க நேர்ந்தால் வடிவமைத்துக்கொள்கிறோம் பல முகமூடிகளை (பா.அ.சிவம் - மௌனம்) வழிப்போக்கனின் முகத்தைப் பொருத்திக்கொண்டு வீதி வழி போகையில் வியர்த்தலுக்

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.) கோ.புண்ணியவான் நேற்றைய தொடர்ச்சி........ தாய்மொழி- காலனித்துவம் சிந்திவிட்டுப்போன கசடுகள் தாய் மொழி சார்ந்த உணர்வும் கவிதையின் பாடு பொருளாகப்பரிணமித்தது.மொழிக்கு ஊறு நிகழும்போது யார்தான் தட்டிக்கேட்பது? பின்னர் எதற்கு படைப்பாளன்? உங்கள் சாய்ஸ் சண்டே சமையல் சன் டிவி டாப் டென் தமிழை இங்கே பிறர் கொல்கிறார்கள் தமிழ் நாட்டில் தமிழனே கொல்கிறான் பிலீஸ் பிரதர் லவ் டமில் (ஓவியன் - தலைநகர்) தமிழ் நாட்டில் ஆங்கிலக் கலப்பு, ‘செம்புலப்பெயல் நீர் போல ஆங்கில மொழியும்தான் அழுத்தமாகக் கலந்ததுவே’ என்றாகிவிட்டது விட்டது.அதனைப்பிரித்து எடுத்து, ‘இந்தா - டெட்டோல் போட்டு கழுவிய தமிழ்,’ என்று கொடுப்பதென்பது கொக்குக்குக் கொம்பு முளைத்தால்தான் ஆயிற்று.கவிதையில் என்ன அங்கதம் பாருங்கள். ‘பிலீஸ் பிர்தர் லவ் டமில்’ என்று ஆங்கிலத்தில் சொன்னால்தான் அவர்களுக்குப்புரியும் என்ற நிலை அங்கே! இங்கே மட்டும் என்ன வாழ்கிறதாம்?மலாய் ஆங்கிலம் தமிங்கலம் எல்லா

நேற்றைய தொடர்ச்சி, கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்

( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.) கோ.புண்ணியவான் காதலைப்பற்றி இன்னொரு கவிஞனின் பதிவு இது. யதார்த்த நிழலில் கடந்து செல்லும் காற்றினுள்கூட பயணிக்கும் உன்னோடு பேசும் என் வார்த்தைகள் ........... என்னோடு நீ நடந்த தெருக்களில் நிறம் அறியா அறியாத சுவடுகளாய் பதிந்து கிடக்கிறது உயிர்ச்சிதறல் உன்னில் ஊடுறுத்துச்செல்லும் நினைவுகளினூடே உயிரும் வருகிறது பத்திரப்படுத்த வரவேண்டும் நீ (ப.ராமு- நயனம்) இந்தக் கவிதையின் வழியாக கசியும் பொருளைப்பாருங்கள்.சொல்ல வந்தது அப்படியே சொல்லிலும் விழுந்திருக்கிறது. உயிரின் நிறம் என்ன? அறிய முடியாத நிறம்.அந்த நிறம் அவளோடு நடந்த தெருக்களில் இன்னும் சிதறியே கிடக்கிறதாம். தன் நினைவாலேயே உயிரும் உடன் வருகிறது.அது காணாமற்போகாமல் இருக்க, நீதான் பக்கதுணையாய் வரவேண்டும் என்கிறான் கவிஞன். இந்தக்கவிதை முழுக்க முழுக்க உணர்வுத்தளத்தில் இயங்குகிறது.இது உயிர்ப்புடன் இயங்குவதற்கு அவர் கையாண்ட அற்புதமான படிமம் ஒரு காரணம் .கவிதையில்

கவிதைக்கடவுளின் தரிசனமும் தூக்கம் துறந்த என் பின்னிரவுகளும்( 2009 ஆண்டின் முதல் மூன்று மாதப் புதுக்கவிதைகளின் ஆய்வு.கவிதைப்பற்றிய புரிதலை உண்டாக்க கல்லூரி மாணவர்களை முன்வைத்து எழுதப்பட்டது.)

கோ.புண்ணியவான் வாசகனுக்குக் கவிதையைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் எது முகாமையான காரணியாக அமைகிறது? கருவியா? கருப்பொருளா? ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்னால் புதுக்கவிதை நம் நாட்டில் கால்பதித்தபோது அது ஏற்படுத்திய மிக முக்கியமான வினா இது?அப்போதைக்கு இதற்கான பதிலைத்தரமுடியவில்லை.ஏனெனில் மரபுக்கவிதை தன் அகன்ற சிறகை விரித்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தது.ஆனால் காலம் செல்லச்செல்ல இதற்கானச் சரியான பதில் கிட்டியது என்பது படைப்பிலக்கியத்துறையைக் கூர்ந்து கவனித்து வந்தவர்களுக்குத்தெரியும்.கருவியைப் பின்தள்ளிவிட்டு கருப்பொருள் தன்னை வலுவாக நிறுவிக்கொண்டது. இருப்பினும் நம் நாட்டில் புதுக்கவிதை பிறப்பெடுத்த காலத்தில் இருந்த அதன் வீச்சு பிற்காலத்தில் சூம்பிப்போனது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள் ஆய்வாளர்கள்.புதுக்கவிதை எழுதுவதற்கு எந்தக்கட்டுப்பாடும் தேவையில்லை என்று படைப்பாளன் சிந்தித்ததன் பலனாக கவிதை ஆற்றினுள் கசடுகள்போல மிதக்க ஆரம்பித்ததன.இப்படி வரும் கவிதைகளை காகித ஊடகங்கள் பிரசுரத்ததின் பாதிப்பாகவே இன்றைக்கு கோப்பை நிரம்பி வழிந்தோடும் அளவுக்கு, குடும்பக்கட்டுப்பாடு செய்யாத பெற்றோருக்கு