Skip to main content

Posts

Showing posts from May 10, 2015

தீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார்

அஞ்சலி                                                 தீவீர செயல்வீரன் பாலகோபாலன் நம்பியார் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாய் பாலகோபாலனைப் பத்திரிகையில் பார்க்கமுடியவில்லையே என்று நான் அவ்வப்போது சந்திக்கும் சக எழுத்தாளர் பி . கோவிந்தசாமியைக் கேட்டபோது , அவர் நோய்வாய்ப்பட்டு இந்தியாவில் சிகிட்சைப்பெற்று வருகிறார் என்றார் . வெளிநாட்டில் சிகிழ்ச்சி பெறும் அளவுக்கு நோயின் சீற்றம்   எனக்குள் படிமமாக வளர்ந்துகொண்டே இருந்தது . முகநூலில் அடிக்கடி எழுதுபவர் பாலா . நேரடி உரயாடலுக்கு வந்து விலாவாரியாக பேசுவது உண்டு . ஏன் இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை என்று கேட்டேன் . உடல் நிலை உடன்படவில்லை அண்ணா என்று சொல்லிவிட்டு உரையாடலை நீட்டிக்காமல் துண்டித்துக்கொண்டார் , அல்லது உரையாடல் தொக்கி நின்றது . “ உடம்புக்கு என்ன ?” என்ற என் தொடர் கேள்வி உரையாடல் பெட்டியில் பதில் சொல்லப்படாமலேயே இருக்கிறது இன்றைக்கும் . அதற்குப் பதில் சொல்ல அவர் தயங்கியது போன்ற பின்வாங்கல் . அதன் பின்னர்தான் அவர் கடுமையான நோய்மை அவரை தாக்கியிருக்