Skip to main content

Posts

Showing posts from January 6, 2013

7. சீனப்பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

 மறுநாள் காலை குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தனர். பனிச்சறுக்கு விளாயாட்டு இடத்துப் போகலாம் என்ற முடிவால் நேர்ந்த மகிச்ச்சி காரணமாகத்தான்.  நல்ல வேளையாக அதற்கு சறுக்கு என்ற சொல் இருப்பதால் சறுக்கி விழுந்தாலும் தப்பில்லை என்றாகிவிடும்! விளையாட்டே சறுக்குதான் என்பதால் பனியில் சாகசம் காட்டினாலும் சறுக்குதான். சாகசம் காட்டத் தெரியாவிட்டாலும் சறுக்குதான். எனவே தாராளமாகச் சறுக்கலாம். பெண்கள் எவ்வளவுதான் வழுக்கி விழுந்தாலும் அங்கே கெட்ட பெயர் வந்துவிடாது. விடுதியிலிருந்து இரண்டு மணிநேர ஓட்டம். பட்டணத்திலிருந்து முதல் முறையாக கிராமப்புறம் வழியாக வேன் செல்கிறது. எங்கு பார்த்தாலும் வெண்மை பூசிக் கிடக்கிறது பூமி.பனி பெய்து கெட்டி தட்டிப்போய்க் கிடக்கிறது. சாலையில் வாகனங்களைத் தவிர  வெளியே மனித சலனமே இல்லை. விவசாய நிலம்போலத் தெரிகிறதே தவிர, மனித நடமாட்டமே இல்லை.ஆங்காங்கே சுவர்க்குடிசைகள் இருக்கின்றன. விவசாயிகளுடையது. கடும் குளிருக்குப் பயந்து உள்ளே பதுங்கி இருக்கிறார்களோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் ஏகழைகள்தான். கம்னியூஸ்ட்நாடாகச் சீனா இருந்தபோதே ஏழைகளாக இ

6. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

  சீனர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கங்களை குவிப்பதற்குக் காரணம் தேடுபவர்கள் முதல் நாளில் நாங்கள் பார்த்த அக்ரோபேட்டிக் விளையாடுகளைப் பார்த்தாலே புலனாகிவிடும்!    இரண்டு கைகளாலும் இரண்டில் தொடங்கி  20 பந்துகளை விடாமல் வீசிப் பிடிக்கும் சாகசமும் சரி, ஒற்றை சக்கர வண்டியில் கம்பிமேல் பலவித சாகசங்களை செய்து காட்டிய விளையாட்டிலும் சரி பார்ப்பவரை கண்சிமிட்ட விடாது, பிரக்ஞை பிறழ விடாது அப்படியே சிலையாய் பிடித்து வைத்து விடுகிறது. ஒரு மந்திரக்கோலின் அசைவுக்கு கட்டுப்பட்டதுபோல பார்வையாளர்கள் நிலைகுத்திய பார்வையிலிருந்து விலகவில்லை! ஒருவன் ஒற்றைச் சக்கர சைக்கிலில் சாகசம் செய்யும்போது நம் உயிர் நம் கையில் இல்லை. நாம் விழுந்து தெறித்துவிடுவோமோ என்ற அச்சம் உடலில் எறும்புபோல ஊடுருவிய வண்ணமே உள்ளது.     ஐநூறு பேருக்கும் மேல் கூடியிருந்த கூட்டத்தை என் ஒரு வயது பேரனின் செய்கையும் சிரிக்கவைத்து விட்டது. ஒரு சாகச நிகழ்வு முடிந்த இன்னொஉரு சாகச நிகழ்வுக்கு இடையில்   ஒரு 20 வினாடிக்கு விளக்கு அணைக்கப் படுகிறது. இருள் சூழ்ந்ததும் அவன் ஒரு அதிருப்தி கூச்சல் போடுவான்.

5. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

பாண்டா கரடிகளை தொலைகாட்சிகளில் பார்த்ததுதான். சில சமயங்களில் நம் நாட்டு அரசியல் வாதிகளோடு அவற்றைப் பார்ப்பதில் குழப்பம் உண்டாகிவிடுகிறது. எது கரடி , எது அரசியல் வாதி என்று அடயாளங் காண்பதில்!  குழந்தைகள் அவற்றைப் பார்க்கப் போகிறோம் என்பதில் பேரானந்தம். பாண்டாக்கள் குளிர் பிரதேசத்து  மிருகங்கள். அங்கே அவறுக்கான வாழும் சூழல் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தியடோர் பாஸ்கரிடம்தான் அவறைப்பற்றி மேலதிக விபரங்களைக்  கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் மீதே எனக்குப் பிரியமில்லை. நிறைய பேரப்பிளைகளை வளர்த்தாயிற்று! இரண்டு பாண்டாக்கள் புரண்டு புரண்டு விளையாடியதை வெகுநேரம் குழந்தைகள் ரசித்துக்கு கொண்டிருந்தனர். ஒன்றையொன்று கட்டிப்பிடித்து உருள்வதும், முத்த மிடுவதும், குழியில் விழுந்து புரள்வதுமாய் 'சாகசங்களாகவே' குழந்தைகள் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன. பெரியவர்கள் கூட சற்று நேரம் கவலை மறந்து சிரிக்கலாம். ஆனால் குளிர் அங்கிருக்க விடாமல் விரட்டியது. என்னதான் உடல் முழுதும் தடித்த துணியால் போர்த்

4. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

        4. மறுநாள் காலையில் சீனப் பூமியைப் பார்க்க எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மிகுந்திருந்தது. புது மண், புது காற்று ,புது சூழல், ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால் பழக்கப்பட்ட அதே மஞ்சள்   நிற மனிதர்கள். அதிகாலையில் பத்துக்கெல்லாம்   எழுந்துவிட்டோம். பதினோரு  மணிக்கு மேல் காலை உணவு  உண்ண முடியாது என்பதால் அப்படி 'வெள்ளனெ' எழுந்துவிட வேண்டியிருந்தது. சீன உணவு வகை உலகப் புகழ் பெற்றது. அதிலும் 'டிம் சம்' என்ற பலகார உணவை ஒரு கை பார்க்கவேண்டி நா துடித்தது. என் மகன் தான் ஈப்போவில் ஒரு முறை அந்த உணவை அறிமுகப் படுத்தினான். அதிலிருந்து அதன் மேல் ஒரு தனியாத மோகம்.  எல்லாரையும் கதவைத் தட்டி எழுப்பிவிட்டு கீழ் தளத்துக்கு வந்தோம். ஒரு சிலரே அங்கே இருந்தனர். குறிப்பாக ஐரோப்பியர்கள். சீனர்கள் சுறுசுறுப்புக்கு பேர் போனவர்கள். பதினோரு மணிக்குள் பகல் உணவுக்கு தயாராகி விடுவார்கள் அல்லவா? உணவுதானே அவர்களுக்கு வாழ்க்கையே! இன்றைக்கும் சீனர்களை நாம் சந்திக்கும்போது , அது எந்த நேரமாக இருந்தாலும் ''சாப்பிட்டு விட்டாயா?" என்றுதான் நலம் விசாரிப்பார்கள