Skip to main content

Posts

Showing posts with the label பயணக் கட்டுரைகள்

மாடுகள் மலைகள் ஏரிகள் ~ இறுதித் தொடர் நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~10 (இறுதித் தொடர்) பூனாய்காக்கி ஒரு சிற்றூர்தான். சாலையோரத்தில்  ஒரே ஒரு நீண்ட கடைகள் வரிசை கொண்ட சிக்கனமான நிலப்பகுதி. ஆனால் அது பேன்கேக் வடிவிலான பாறைகளும், அதலபாதாள வலைகுடாக்களும் கொண்ட கடற்கரை ஊர். இதனைப் பார்க்கப் போய், கவனமற்றிருந்த  எத்தனை பேர் உயிரை விட்டிருப்பார்கள் என்று சொல்வதற்கு அங்கே சில எச்சரிக்கை வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்தன. அதில் மிகவும் துல்லியமான, படிமங்களை விரித்து, அச்சுறுத்தவல்ல ஒரு வாக்கியம், "ஒரே ஒரு புகைப் படத்துக்காக, உயிரை இழக்கும் முட்டாளா நீங்கள்' என்பது. ஆமாம் செல்பி தம்படம் என்ற பெயரில் நடக்கும் கோமாளிக் கூத்தை மலேசியாவில் நிறையவே காணலாம். சில பெண்கள்  குறிப்பாக இந்த தம்படம் எடுப்பதில் தங்களைக் கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். முன்னர் யாராவது எடுத்துத் தந்து அதனை படமாக்கிக் கொடுக்கும் பழைய தொழிநுட்பத்தை பன்மடங்கு தாண்டிவந்த ஒரு வசதிதாதான் இப்போதுள்ள கருவிகளும்  இந்தத் தம்படமும்.ஆனால் அதற்காக இத்தனை வகைப் படங்களா?  இத்தனை அலட்டல்களா?  தங்கள் அழகை தாங்களே ரசிக்கும் ஒரு உத்தி இது எ...

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 9 நியூசிலாந்து பயண அனுபவம்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 9 அதிகாலையில் பனிமலைக்கு எல்லாரும்  கிளம்பியபோது நான் அவர்களோடு நான் போகவில்லை. என் செவிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சில தொல்லைகளைக் கொடுத்து வந்தது. கண் காது மூக்கு டாக்டர் செ விப்பறையில் சிறு துளை விழுந்திருக்கிறது, அதனால் சத்தம் உள்ள   இடத்தைத் தவிர்க்கும் படி அறிவுறுத்தினார். நான் தொலைக்  காட்சி கூட பார்ப்பதில்லை. சினிமா தியேட்டர்கள் அதை விட மோசம்.  கொஞ்சம் கவனமாக இருந்ததால் செவிப்பறை கூடி வந்தது. உலங்கு வானூர்தி அதிக ஒலி எழுப்பக் கூடியது.எனவே தவிர்த்தேன். ஆனால் எல்லாருக்கும் செவி பாதுகாப்பு கருவி கொடுத்தார்கள் என்றார்கள். நான் போகவில்லை என்றதும், அன்றைக்கான காலை பகல் உணவை நான் தயாரிக்கும்படி ஆனது. முதல் நாள் வாங்கி வைத்த இறாலைப் சம்பல் செய்தேன்.  வெள்ளரிக்காயை (9  ரிங்கிட்) முட்டை கலந்து சூப் செய்தேன். பகலுணவு உண்ணும் போது சாப்பிடச் சாப்பிட சாப்பிட்டுகிட்டெ இருக்கணும் தோணுது என்றார்கள். ஒரு கலைஞனுக்கு எல்லாமே எளிதில் கைவரும். பனிமலைக்குப் போய் வந்தவர்கள் மறக்க முடியாத அனுபவம் என்றார்கள...