Skip to main content

Posts

Showing posts from July 10, 2016

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி

  தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி .                                            இரண்டு இரவுகள் தங்கியிருந்த விடுதி சொங்க்லாக் கடற்கரையோரம் உள்ள ஒரூ தாய் எழுத்தாள்ரின் சிலை. மலேசிய கிராமப்புற சாலையோரங்களில் நீரா நீப்பா ( பனங்கள்) விற்பதைப் போல தாய்லாந்து கிராமங்களிலும் ஒருவகை இயற்கை பனை மர மதுவை விற்கிறார்கள். சாலை இரு மருங்கிலும் இப்படி நிறைய அங்காடிகள் இருந்தன. பானு ஒரு புட்டி வாங்கி வந்தார். 10 பாட்தான். அதனை உடனே திறந்து ஒர் மிடறு ஊற்றினார்.திறந்த கணத்தில் அதன் கெட்டிய வாடை குப்பென்று காரை நிறைத்தது. கள்வாடைதான். ஆனால் அது பலநாட்கள்  உறை போட்டதுபோல கனத்த நெடி. கிட்டதட்ட வாந்தியை வெளித்தள்ளும் நெடி. அவர் உடனே புட்டியை மூடிவிட்டார்.அலாவுதினின் 'ஜீனி' மீண்டும் அடைபட்டது. ஆனால் காருக்குள் அடைபட்ட வாடை ஒவ்வாமையை உண்டுபண்ணியது. சிறிது நேரம் வாடை வெளியேற காண்ணாடிகளைத் திறந்துவிட வேண்டியதாயிற்று. புலித்த சுவை என்றார் பானு. ஒரு மிடறு ஊற்றிவிட்டவர் ஒரு திணறு திணறினார். அவர் தலை புலித்த சுவையைத் தாங்க முடியாமல் குலுங்கி நின்றது.கேஸ்டிரிக் உ

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5

அன்று இரவு நிறைவான தூக்கம் கிடைத்தது. அதிகக் களைப்புதான் காரணம். தூக்கம் வராதவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன. என் பங்குக்கு நானும் சொல்லிவைக்கிறேன். சாயங்கால நேரத்தில் உடல் களைக்க பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். உடல் வலிக்க வலிக்க. அல்லது குனிந்து நிமிர்ந்து தோட்ட வேலை செய்யுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள் பயிற்சி முடிந்து. இனிப்பு நீர் உள்ளவரகள் குறைந்த கேலரி உணவை அதிகம் சாப்பிடலாம். தினமும் சரியான நேரத்தில்உறங்கப் போவது மிக முக்கியம். உறங்கப்போகும் கால வரையறையைச் தள்ளிப்போடாதீர்கள். நாளாக நாளாக  11 மணி என்பது  பின்னரவு இரண்டு மூன்றுக்குத்தான் தூக்கம் வரும். உலகமே தூங்கிவிடும் நாம் மட்டுமே படுக்கையில் புரண்டுகொண்டிருப்போம். அதற்காக தூங்கும் உலகத்தைப் பார்த்து பொறாமை படாதீர்கள். தூக்கம் துக்கமாகிவிடும். நம்முடைய தூக்கம் கெடுவது கால அட்டவணையைக் கறாராகப்  பின்பற்றாததுதான் காரணம். இரண்டாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கண்கள் தூக்கத்தை வேண்டி மல்லுக்கு நிற்கும் வரை நீயா நானா என்று சவாலுக்கு நில்லுங்கள். படுக்கை விளக்கு கைக்கெட்டிய தூரத்தில்தான் இருக்க வ

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4

4..தாய்லாந்தில் இரண்டு நாட்கள் தாய்லாந்தின்  இப்போதைய மன்னர். விடுதி அறை ஏழாவது மாடியில் இருந்தது. அறை கண்ணாடிக் கதவு வழியாக கடல் அலைகள்  எங்ளை அழைத்து அணைத்துக் கொள்ளத் துடித்துக் கொண்டே இருந்தது. காணக் காணக் கடல் சலிப்பதில்லையே ஏன்?  நீர் இலயல்பாகவே தண்மையானது. மனதைச் சமன் செய்யும் தன்மை மிக்கது.  கொஞ்ச நேரம் கடலைப் பார்த்தால் எல்லாத் துயரும் அலையில் அடித்துச் சென்று விடும். உலகில் அதிகம் பயணிகள் செல்லுமிடம் நீர் நிலைகளாகத்தான் இருக்க முடியும். தண்ணீர் என்று அதற்குப் பெயெரிட்டதே நம் சான்றோரின் அறிவுடமையைக் காட்டுகிறது. குளித்தாலும் குடித்தாலும் பார்த்தாலும் அது தரும் பரவசம் அலாதியானது. ஐரோப்பியன் கண்டு பிடித்த மது வஸ்த்களைக்கூட நாம் லாவகமாகத் 'தண்ணி' என்று பெயரிட்டு அதிலும் 'தண்மையை' அடைந்து சமன் செய்துகொள்கிறோம். நான்தான் முதலில் அறைக்குச் சென்றேன். களைப்பில் சற்று நேரம் கண்ணயர்ந்துவிட்டு பின்னர் வெளியே போகலாம்..  முதலில் கடலோரம் நடைப் பயிற்சி செய்யலாம் என்றே முடிவெடுத்திருந்தோம். ஆனால் சுங்கச்சாவடியில் சாவடியாகக் காத்திருந்ததும், வெயிலில் பசியோடு பயணித்