Skip to main content

Posts

Showing posts from March 20, 2016

அரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்

        அரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம்                                                    ரெ.காவின் கதைகள்.                                       அரை நூற்றாண்டு காலமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் புனைவிலக்கியம் தொடர்த்து படைக்கப்படாத  போதுதான் அது எவ்வளவு பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்ற ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது என்று உணரமுடிகிறது. ரெ.கா சிறுகதைகள் சற்றே தனித்துவம் வாய்ந்ததவை.அவற்றை வாசிப்பது தனி சுகம். சற்று முன்னர் துளிர்விட்ட இலைபோல வெளிர் மஞ்சலிலும் மென்மையிலும் ஈர்க்கும் மொழி. அவரின் சிறுகதை நடை சட்டென அடையாளம் காணக்கூடியது. குறிப்பாக வாக்கியங்கள் எளிமையான சொற்களாலானதாக இருக்கும். அவரின் சொற்களின் தேர்வு வசீகரமானது. கடினமானவற்றையும் எளிமையாக்கும் ரசவாதம் நிகழ்த்திக் காட்டியிருப்பார்.  கடையக் கடைய வெண்ணெய் திரண்டு வருவதுபோன்ற கதை மெல்ல மெல்ல வளரும்..  பின்னர் சாட்டையைச் சொடுக்கியதும் அசுரமாய்ப் பாய்ந்து ஓடும் குதிரையைப் போல முடிவை நோக்கி இழுத்துச் செல்வார். புரிதல் சிக்கலற்ற சின்னச் சின்ன வாக்கியங்கள். வாசகனை தன்வயப்படுத்தும் மந்திரங்களால் ந

ரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை

ரெ.கா கதைகளின் அழகியல் கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை பின்னால் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பவர். ஒரு படைப்பாளரை  அவருடைய மெய்யியல் சிந்தனை வெளிப்பாட்டு அளவுகோல் கொண்டும் நிறுத்துப் பார்க்கலாம். அதிகமாக வாசிக்கின்ற ஒருவனுக்கும் தர்க்கரீதியாகச்  சிந்தித்து முடிவெடுக்க முடியும். பழுத்த வாழ்க்கை அனுபவமுள்ளவர்கள் தங்கள் பேசும்போது தத்துவமாக கொட்டுவதைப் பார்த்திருக்கிறோம். காதலில் தோல்வியுற்ற இளசுகளின் வாயில் தத்துவ வெளிப்பாடு இருக்கும். காதலித்த அதே பெண்ணைத் திருமணம் முடித்தவர்கூட தாடி வளர்த்து சலித்துப் போய் தத்துவத்தில் வந்து நிற்பார் . நவீன அரசியலைக் கட்டமைக்கும் இடது சாரிகளுக்கும், ஆன்மிக ரீதியாக வாசித்து முதிர்ச்சி பெற்றவர்களுக்கும் மெய்யியல் சிந்தனை வரும். பேச்சாளர்களின் பேச்சை செவிமடுப்பவன் மூலமும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து  முடிவெடுக்க முடியும். மெய்யியல் என்ற சொல்லின் பொருளை எளிமையாகச் சொல்வதென்றால் தெளிவான சிந்தனைக்கு வருதல் எனலாம். எது சரி எது தவறு? எது சரியான பாதை எது தவறான பாதை என்று தெரிந்து கொள்வதுதான் மெய்யியல். ஒரு தேர்ந்த படைப்பாளனின் நாவலில், கதையி