Skip to main content

Posts

Showing posts from November 22, 2009

வீண் விவாதங்கள் நம் அறிவீனத்தின் புகலிடமோ?

                                          வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் நிழல் போல நம்முடன் நடந்து வருபவை. நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது முன்னர் எப்போதோ பதிந்து கிடந்த சம்பவங்களை, மூளை சட்டென இழுத்து வந்து நினைவுப்பட்டியலின் வரிசையில் முதல் ஆளாக நிற்க வைத்துவிடும். குறிப்பாக நண்பர்களுடனான உரையாடலில்போது நமக்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு ஈடான பேச்சு எழுந்தால் இதுபோன்ற அதிசயங்கள் நடந்துவிடும். நாம் படித்து சேமித்து வைத்ததை விடவும், அனுபவித்தவைதான் அதிக அளவில் பதிவாகி வைத்திருக்கும் மூளை. எழுத்துக்களைவிட மனித பிம்பங்களும், அவர்கள் ஏற்படுத்தித்தந்த அனுவங்களும் தாமாகவே மச்சங்கள்போல் அழுத்தமான இடத்தைப்பிடித்து வைத்துக்கொள்கின்றன மூலையின் எங்கோ ஒரு மூலையில். பின்னர் சந்தர்ப்பம் பார்த்து வெளியாகின்றன போலும். நான் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நடந்த சம்பவம் இது. மாணவர்கள் பள்ளியில் அதிகம் விரும்பும் நேரம் ஓய்வு நேரம். ஏழு எட்டு மணிநேர தொடர் பாட வேளையில் அவர்களுக்குக்கிடைக்கும் ஓய்வு நேரம் சொற்பமான 20 நிமிடங்கள் மட்டுமே. பாடங்களைவிடவும், பிரம்போடும் வன்மமான முகத்தோடும், சமரசமற்

கடைசி சந்திப்புக்குப்பிறகான நினைவுக்குறிப்புகள்

கோ.புண்ணியவான் ஜனவரி 28. மாலை மணி 6.25. ராணி கடைசியாக வீட்டுக்கு வந்தபோதுகூட இழை சந்தேகங்கூட உதிராமல் தன்னைப்பற்றிய அந்தரங்கத்தைத் தன் பிடியிலேயே பதுக்கி வைத்திருந்திருக்கிறாள். ராணி தாதிமைப்பயிற்சியின் விடுமுறை காலத்தில் வரும்போதெல்லாம் முக்கால் வாசி இயல்பு மாறாத, பழைய ராணியாகவே இருந்திருக்கிறாள். கோலாலம்பூரின் நவநாகரிகப்போக்கு, கலாச்சார அதிர்ச்சி, மொழி எதுவும் அவளிடம் பெரிதான மாற்றங்களைப்பதிவு செய்திருக்கவில்லை. உடையில் ஒப்பனையில் அவ்வப்போது சின்னச் சின்ன மாறுதல்கள் ஊடுருவியிருந்தன. அதிலும் ஒரு கட்டுக்கோப்பு, தன்னடக்கம் என சிறு வயது முதலே பெற்றோர் கட்டமைத்துக்கொடுத்த ஒழுங்கோடு-எல்லையைத்தாண்டாமல், சுயத்தோடு அவள் அவளாகவே இருந்திருக்கிறாள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் எல்லாப்பருவப் பெண்களிடம் இருக்கும் விருப்பம் அவளிடமும் இருந்ததை எப்படி சந்தேகப்பிரதேசத்துக்குள் நுழைப்பது? ராணி மீண்டும் பயிற்சிக்கு வீட்டை விட்டுக்கிளம்பி அன்றிரவு அவள் போய்ச்சேர்ந்துவிட்டாளா என்று உறுதிப்படுத்திக்கொள்ள தொடர்பு கொண்ட போது தொலைப்பேசி அம்மாவின் தகவலைப் பதிவு செய்துகொண்டதே தவிர, வெகு நேரம் நீண