Skip to main content

Posts

Showing posts from July 5, 2015

பாபநாசம்- சுயநலவாதத்தின் மையம்

 சுயநலவாததத்தின் மையம் ஒரு சராசரி மனிதனின் வாழ்வு சமநிலை இழக்கும் தருணத்தில் அவன் சிந்தனை வெளிப்பாடு மிக அசாத்தியமாக அமையும். அதாவது நாம் எதிர்பாராத விதமாக சிக்கலில் மாட்டிக்கொள்ளும் போது அந்த சிக்கலிலிருந்து விடுபட நாம் மிகத்தீவிரமாக சிந்திக்க ஆரம்பிப்போம். ஒரு வெறிநாய் விரட்டும் போது நம் கால்கள் அசாதாரண துரித கதியில் ஓடுவது போலத்தான். அந்த வேகத்துக்கு ஈடாக சிந்தனை இட்டுச்செல்லும் பாதையில் செயல்படுவோம். அந்தச் சிக்கலால் உண்டாகும் மன அழுத்தங்கள் நம்மை பெரிது பாதித்துவிடாமல், புறம்தள்ளி சிக்கலிலிருந்து வெளியாகும் எல்லாச் சாத்தியங்களையும் கையாள்வோம். இந்த நிதர்சனத்தையே முன்வைக்கிறது பாபநாசம். எப்பேற்பட்ட மனிதனாக இருந்தாலும் அவன் சுயநலமே அவனுக்கு முன்னால் நிற்கும். அவனும், அவன் உடன் பிறந்தாருமே அவனுக்கும் அதிமுக்கியம். வெகுசன தர்மத்தை பின்தள்ளிவிட்டு தனக்கென ஒரு தர்மத்தை நியாயப் படுத்துவான்.சுயம்புலிங்கம்  அதைத்தான் பாபநாசத்தில் முன்னெடுக்கிறார். இதே சுய நியாத்தை ஐஏஸ் அதிகாரியும் கையாள்வதைப் பார்க்கிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தன் குடும்ப கௌரவமே முக்கியம் எனக் கருதி தன்