Skip to main content

Posts

Showing posts from September 6, 2009

புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை

எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது. கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம். 1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ மலேசியாவுக்கு எதிர்ப்புறம், சீனர்கள் அதிகமாக வாழும் புறநகர்ப்பகுதியை ஒட்டிய கிந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியின், டொமெட்ரியின் மூன்றாவது மாடியில், நள்ளிரவைத்தாண்டிய மூன்றாவது ஜாமத்தின் ஒரு அந்தகாரப்பொழுதில் உறக்கம் என்னை அரக்கத்தனமாக இறுக்கமாக அணைக்கத்தொடங்கிய நேரம். குளோர் என்ற சத்தத்துடன் ஏழெட்டு பயிற்சி ஆசிரியர்கள் பொறுக்கிகளாக பரிமாணம் கண்டு அந்த டோமெற்றிக்குள் மிகுந்த ஆரவாரத்துடன் நுழைகிறார்கள்.வெண்கல கடைக்குள் கட்டுமீறிய காட்டு யானைகளைப்போல பிளிரளும் பீதியும் கிளப்பியவண்ணம் அவர்களின் நுழைவு தூக்கத்தைக் கீறிக் களைத்துவிடுகிறது.டோமில் இருக்கும் எல்லா டியூப் லைட்களையும் சுவிச் ஆன் செய்ததால் வேறு, ஒவ்வொன்றும் கேமரா பளீச்சென வீரிய வெளிச்சத்துடன் உயிர்த்துக்கொள்கின்றன.’சற்று முன்வரை இருளில் தோய்ந்திருந்த இடம் வேஷம் கலைந்து வெளிச்சப்பிரவாகம் கண்களை கூசச்செய்து உறக்கத்தைக் கலைத்துவிடுகிறது. பின்னிரவு மணி 1.46 வரை மறுநாள் ஒப்படைக்கவேண்டிய நன்னெறி, பயிற்றியல்

கவிதை: மிதந்துகொண்டிருக்கும் வார்த்தைகள்

விட்டுப்பிரியும் நண்பர்களைவிடவும் அறையில் மிதந்துகொண்டிருக்கும் அந்த உரையாடல்களை ................. அட்டமத்தில் வியாழனனும் ஏழரை சனியனும் செவ்வாயில் தோஷமும் மென்னியை இறுகியிருக்கும் நாகதோஷமும் நாயே பேயேவும் மக்கு மடச்சாம்பிராண்டியோ என்னைப்புணரும் தருவாயில் மட்டும் முற்றாய் மூழ்கி அமுங்கிப்போவதேனோ ............................ கூச்சமில்லாமல் முகத்துக்கு நேரே என்னைப்பாராட்டும் ஒப்பனை தருணத்தில் எனக்குப்பின்னால் பிராண்டிய உன் வார்த்தைகள் நீ பேசப்பேச அழுகி உதிர்ந்துபோகிறது கோ.புண்ணியவான் Ko.punniavan@gmail.com