Skip to main content

Posts

Showing posts from August 21, 2011

நள்ளிரவில் எஸ்ராவுடன் ஒரு கோப்பை தேநீர் (பாகம் 2)

           அந்த வெட்ட வெளிக்கடையில் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் திசை எங்கெங்கோ போனாலும் திரும்ப இலக்கியத்தின் மீதுதான் மையமிட்டிருந்தது. கடையிலிருந்து வெளியாகும் போது மணி ஒன்றைத் தாண்டியிருக்கும்.மீண்டும் நடந்தே அறைக்குச் சென்றோம்.  எங்கள் பேச்சு மீண்டும் தொடர்ந்தது. "நீங்கள் எழுதிய புத்தகம் கொண்டு வந்தீர்களா" என்று வினவினேன். " ஒரு ஏழெட்டு வகையில் மூன்று நான்கு காப்பிகள் கொண்டு வந்தேன்" என்றார். அவற்றுள் பாதிக்குமேல் நான் படித்துவிட்டவை. அவர் வைத்திருந்ததில் 'மௌனியின் படைப்புகளும் அடங்கும். "மௌனியின் கதைகள் புரிந்து கொள்ள சிரமமாயிற்றே' என்றேன். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நம்முடைய மன எப்பம்டி ஒரே சமயத்தில் பல இழைகளாக சிந்திக்கிறதோ, அதேபோலத்தான் அவர்கதைகளும் இயங்கும்" என்றார்."இப்போ நாம் பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி இன்னொரு இழைச் சிந்தனை வேறு ஒன்றுக்குத் தாவுகிறதோ,அது போலவே அவர் கதையும் தாவும். புரிந்துகொள்வது சிரமமில்லை" என்றார். மௌனியைப் பற்றி நான் வரைந்துவைத்த சித்திரம் இப்போது தெளிவாகத் தெரிந்தது. இதற்கு

நள்ளிரவில் எஸ்ராவுடன் ஒரு கோப்பை தேநீர்.

                              எஸ்ரா என்று செல்லாமாய் அழைக்கப்படும் எஸ். ராமகிருஷ்ணனை நேரடியாகச்சந்தித்து உரையாட 2004 ஆண்டு  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு தமிழகம் சென்றிருந்த போது  நாங்கள்  மூன்று நண்பர்கள் , செய்த முயற்சி தோல்வியில் முடிந்ததும் எனக்கு தமிழக எழுத்தாளர்கள் மேல் வெறுப்பு உண்டானது. ஒரு கண நேரம் சந்திப்பாக மட்டுமே அது இருந்திருக்கூடும் என்றாலும் எஸ்ராவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு நழுவியதில் உண்டான ஒட்டுமொத்த வருத்தம் அது. ஆனால் அந்த வருத்தம் இம்மாதம் 18தேதி முதல் 21ம் தேது வரையிலும் அவரோடு கழித்த தருணங்களால் தவிடுபொடியானது. மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் பயிலரங்கில் நானும் ஒரு கட்டுரை வாசிப்பதாக இருந்ததால் 18 ம் தேதியே கோலாலம்பூர் பயணமாகவேண்டியிருந்தது. அன்று மாலை ஏழரை மணிக்கு கிரண்ட் பெசபிக் விடுதியை அடைந்ததும் நான் சந்தித்த முதல் மனிதர் எஸ். ரா. அப்போது அவரை பார்த்த அந்த முதல் கணம் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்துவிடப் போகிறது என்று பட்டது. அப்போது எஸ்ரா முனைவர் முல்லை ராமையாவோடு பேசிக்கொண்டிருந்தார். நான் என்னை  அறிமுகப்படுத்திக்கொண்டதும் என்னை அவர்