Skip to main content

Posts

Showing posts from March 27, 2011

8. பனிப்பொழிவில் 10 நாட்கள்

 சாலையோர டபா (உணவுக்கடை)  செங்கோட்டை மார்பல் வேலைபாடுகள் கைகளால் செதுக்கப்பட்டவை  தாஜ்மஹால் தொடர் 8 அதிகாரத்துவமும் அடிமைத்தனமும்  டில்லியைக் கடக்கையில்  முக்கிய சாலையோரத்தில் தலைவர்கள் சிலைகள் நிறுவப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தச் சிலைகள் தரும் செய்தி படிமமாகி மனதை வருத்தியது. ஆமாம் , விடுதலைப் போராட்டத்துக்கான வியர்வையும் ரத்தமும் சிந்திய காட்சி சிலைகளாக எழுந்து நின்றுகொண்டிருந்தது.    பேசிக்கொண்டே போகையில் வெள்ளிக்கிழமை அக்ராவில் இருக்கும் காதல் சின்னமான பளிங்கு மாளிகை , தாஜ்மஹால் வெள்ளிக்கிழமை அடைப்பு என்ற செய்திதான் அது. நாங்கள் வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூரில் இருப்போம். அப்படியானால் தாஜ் மஹாலைக் காண்பது கனவாகவே கலைந்துவிடும் என்ற பயம் மருமகனுக்கு. நான் 2002ல் தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டேன். எனவே எனக்கு அது பெரிய விஷயமாகப் படவில்லை.   நான் தாஜ் மஹாலைப் பார்த்தே ஆகவெண்டும். அதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். நீங்கள் உடனே திசையை மாற்றுங்கள் என்றார். டில்லியைக் கடந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் மெய்ன் சாலைக்கு நுழைந்தாயிற்று. அக்ராவை அடைய  மூன்று மணி நேரமாகும். இடையி

7, பனிப்பொழிவில் 10 நாட்கள்

சண்டிகார் கைவினைக் காட்சியகத்தில், பொற்கோயில் புனித நீராடல், ஒரு சுவையான உணவு வகை.      தூசு படிந்த நகரத்தில் தூய்மையான புனிதத் தலம்      அது கார் விற்கப்படும் சந்தையாம். கார் விற்பவர்கள் வாங்குபவர்கள் கூடும் இடம்- ஞாயிற்றுக்கிழமைகளில் இது நடக்குமாம். அவர்களுக்கிடையே பேரம் நடக்கிறது. கார் விற்பனையாளரிடமே நேரடியாகப் பேரம் பேசி காரின் நிலை பரிசோதித்து வாங்கிக்கொள்ளலாம். செக்கண் ஹாண்ட் கார் விற்பனையாளருக்கோ, இடைத்தரகருக்கோ  அங்கே இடமில்லை. பத்தாயிரம் வெள்ளிக்கு அடித்து வாங்கிய  செக்கண் ஹாண்ட் காரை விற்பனையாளர்கள் இருபதாயிரம் வெள்ளிக்கு விற்று கார் சொந்தக்காரரின் வயிற்றில் அடிக்கும் பழக்கம் இங்கு போல அங்கு இல்லை. நேரடி விற்பனை. கார் சொந்தக்காரர் பெரிய நஷ்டத்தில் விற்கும் நிலை இங்கே ஏற்படாது. கார் சந்தை நம் நாட்டிலும் இருந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. செக்கண் ஹாண்ட் கார் விற்பனையாளர்கள் சும்மா விடமாட்டார்கள்!          சுத்தம் கிலோவுக்கு என்ன விலை என்று கேட்கும்  டில்லியைப் போலவோ சென்னையைப் போலவோ சண்டிகார் இல்லை. பட்டணம் மிக நேர்த்தியாக இருந்தது. குப்பை கூலங்கள் இல்லை.