Skip to main content

Posts

Showing posts from December 6, 2009

தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம் கோ.புண்ணியவான்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக் கல்விச்சான்றிதழ் (spm) சோதனையில் 2010 முதல் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என அரசாங்கத்தின் அதிரடி முடிவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களின் மேலான மாணவர்களின் ஆர்வம் சிதைவுறும் கட்டத்தை அடைந்ததுள்ளது எப்போதுமே தமிழ் மொழி தமிழ் கற்ற பலருக்குச் சோறுபோடும் மொழியாக இருந்தது கிடையாது.( தாய் மொழியை அப்படிப் பார்ப்பதால்தான் அதன் சிதைவுக்கும் அழிவுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்) மலேசியாவில் மட்டுமல்ல , சிங்கப்பூர், தமிழர்களையே கொன்று குவித்த சிரி லங்கா, ஏன் தமிழ்நாடும் அதே நிலையைத்தான் எதிர்நோக்குகிறது. தமிழ் மொழி செம்மொழி தகுதியை அடைந்த பின்னரும் தமிழகத்திலும் அதன் தலயெழுத்தை மாற்றமுடியாது இருப்பதானது தமிழுக்கே இருக்கும் தனித்த பெருமை. மலேசிக் கல்விச் சான்றிதழ் சோதனையில் கூடிய பட்சம் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற அரசின் அறிவிப்பையொட்டி, 12 பாடங்களாக உயர்த்த வேண்ட

அதிகாரத்துவத்தின் நீட்சியும் ஆளுமையின் வலிமையும்

கோ.புண்ணியவான் மலேசியாவின் நான்காவது பிரதமராக அரியணையமர்ந்த மஹாதிர் முகம்மது 20ம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியின் உயரிய பீடத்தில் இருந்து 2003 ஆண்டு பதவியிலிருந்து “விருப்ப” ஓய்வு பெற வேண்டியிருந்தது. மலேசியப் பிரதமர்களில் அதிக காலம் பதவியில் இருந்தவர் இவர்தான். பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியிலிருந்து மலாயாவுக்கு விடுதலைபெறும் முயற்சியில் ஈடுட்ட முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுடன் கருத்து மோதல் காரணமாக பலம் வாய்ந்த மலாய் இனக்கட்சியான அம்னோவிலிருந்து (UMNO-United Malayan National Organisation) நீக்கப்பட்டவர், பின்னர் பீனிக்ஸ் பறவையாய் சாம்பலைத்தட்டிவிட்டு உயிர்த்தெழுந்து மீண்டுவந்து, மிகச்சாதூர்யமான ஆளுமையாகத் தன்னை வடிவமைத்துக்கொண்டு மலேசியாவின் பிரதமராக 20 ஆண்டுகாலம் நீடித்த பெருமை இவருக்கு உண்டு. பதவிலிருந்தபோதும் அவரின் குரல் வலிமையான பலமுடையதாக இருந்ததால் மலேசியா தொழில்நுட்பத்துறையில் துரித முன்னேற்றம் கண்டது. ஓய்வு பெற்ற பிறகும் அவரின் அதிகாரக்குரலின் வலிமை நீர்த்துப்போகாமல் இருப்பது மலேசிய அரசியல் இதுவரை சந்திக்காத ஒன்று. மஹாதிருக்குப்பிறகு பிரதமராக இருந்து, கு