ஜெயமோகனோடு சுவாமி பிரம்மானந்தா அவர்கள் (அச்சில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வழங்கிய முன்னுரை இது.) உலகில் இருவர் சேர்ந்திருப்பது மிகச்சிரமமான காரியம். ஏனெனில் அடிப்பபடையில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். உலகிலேயே சுதந்திர இச்சையுடன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் மட்டுமே. அவன் மற்றவர்களோடு பொருந்தி வாழ முடியாததற்கு காரணமே அவன் பகுத்தறிவு உள்ளவன் என்பதாலேயே. என்னதான் இயற்கையான உடற் தேவை காரணமாக அவன் கூடி வாழ விரும்பினாலும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே இருந்து அவனை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தன் உணர்ச்சியின் உச்ச நிலையைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் தேவைப்பட்டாலும் அந்த உறவுகளால் ஏற்படும் உரசல்களால் மீண்டும் மீண்டும் அந்நியபட்டே போகிறான். கொந்தளிப்புக்களையும் மனவலியையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் தேவைபட்டாலும் அவர்கள் மேல் உள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை மீண்டும் மீண்டும் அவனை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அவன் தன்னிலை தவிர்த்து வேறெதிலும் பாதுகாப்பை உணராத நிதர்சனம்தான். அதனால்தான் மனிதர்கள
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)