Skip to main content

Posts

Showing posts from April 21, 2013

ஆளும்கட்சி இனவாத அரசாக நீடிப்பதை ஹிண்றாப் வழிமொழிகிறதா?

                                             பிரதமர் முன்னால் ஒப்பந்தக் கையொப்பம்                  ம லேசியாவில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் , ஹிண்றாப் ஆளும்கட்சியோடு கைகுலுக்கி இருப்பதை நாட்டின் பல தரப்பினரிடையே அதிர்வலைகளை உண்டுபணியிருக்கிறது. இது ஹிண்ராப்பின் அடிப்படை கொள்கைக்கும், அதனைத் தொடர்ந்து நடத்திய அரசுக்கு எதிர்ப்பான போராட்டத்துக்கும் முரணானது 2007 ஹிண்டராப் தெருப் போராட்டத்தை அரங்கேற்றிய அதிமுக்கிய காரணியாக இருந்ததே அம்னோவின் இனவாதப் போக்கை வன்மையாக கண்டிக்கவே. அப்போது அதன் நோக்கம் உச்சமடைந்து வாக்காளர்களை 2008 தேர்தலில் ஆளும்தேசிய முன்னணிக்கு பாடம் புகட்டியதையும் மக்கள் மனதில் உணர்வுப்பூர்வமான இடத்தைப் பிடித்திருந்தது. தென்னிந்தியர்கள் மட்டுமின்றி சீன மலாய் சமூகமும்கூட இந்தப் பேரணியை அங்கீகரித்த வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. ‘ஆனால் அது ஒரு பொற்காலம்’ என்றே இப்போது முடிவெடுக்க வைத்திருக்கிறது .                                                          அன்வர் இப்ராஹிம் ஹிண்றாப்பின் கோரிக்கைகள் இனவாதமுடையது,