Skip to main content

Posts

Showing posts from October 26, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 18

கடற்கரை சொர்க்கம் எஸ் மார்க்கோஸ(சேய்ன்ட் மார்க்கோஸ்)- முத்தம் 18 சுற்றுச்சூழலை மாசு படாமல் பாதுகாப்பதில் மேலைச் சிந்தனை மிக மதிக்கத்தக்கது. அவர்களின் எதிர்காலச்  சந்ததியினருக்கு அதனை அதன் இயல்போடு விட்டுச்செல்லவும், தன் முந்தைய தலைமுறையைப்போல போல பாதுகாக்கவும் அவர்களுக்கு தரும் படிப்பினைகளை நாம் பின்பற்றக் கற்றுக்கொள்ளவேண்டும். பள்ளிகளில் சுற்றுப்புற பாதுகாப்பு பற்றிய கல்வி அங்கே காலங்காலமாக போதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மட்டுமின்றி பொது இயக்கங்களும் கூடுதல் கவனத்தோடு செயல்படுகின்றன. நான் லண்டனுக்கு வந்தபோது ஒரு தனிமனித செயலைப்பார்த்து பிரமித்துப்போனேன். ஒரு பெண்  தன் வளர்ப்புபிராணியான நாய் ஒன்றோடு பட்டண மையத்தில் நடந்துவந்தார். அவர் கையில் ஒரு பாலித்தீன் பையும் இருந்தது. ஒரு கட்டத்தில் நாய் தெருவில் மலம் கழித்துவிட்டது. உடனே தன் கையில் வைத்திருந்த  நாய் மலத்தை தெருவிலிருந்து நீக்கி பாலித்தின் பையில் போட்டுக்கொண்டார். மேலை நாடுகளில் நாயைக் கொண்டு வருபவர்கள் கூடவே பையையும் கொண்டு வரவேண்டும் என்பது

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 17

எஸ் மார்க்கோ இத்தாலியின் இன்னுமொரு சொர்க்க நகரம்- முத்தம் 17 மிதக்கும் வெனிசின் இன்னும் சில காட்சிகள்        எத்தனையோ நகரங்களை, கடல் கரை ஊர்களை, குளம் நிறைந்த ஊர்களைப் பார்த்தாயிற்று. ஆனால் வெனிஸ் போல கனவிலும் நனவிலும் முடிவிலியாக காட்சிகளை கண்முன் கொண்டு வரும் வெனிஸுக்கு ஈடு இணை இல்லை. கடலுக்குக்கிழ் நகரங்கள் இருப்பதாக கற்பனைக் கதைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் கடலிலிருந்து மிதக்கும் நகரத்தைப் கண்கொண்டு பார்ப்பது கடலுக்குள் இருக்கும் நகரத்தைப் பார்ப்பதற்கு ஈடாகும். எங்கு திரும்பினும் ஓடும் நதியும், மிதக்கும் நகரமும், கரையோரம் நடந்து செல்லும் மனிதர்களும், நம்மை மறக்கச்செய்கிறது. படங்களில் பார்ப்பதைவிட இங்கே அதன் ரம்மியம் பன்மடங்கு அதிகரிக்கிறது. இயற்கையை நேரடியாக தரிசிப்பதில் உண்டாகும் அனுபவம் பரவசமூட்டக்கூடியது. கார்கள் இல்லை, மோட்டார் சைக்கில்களின் உறுமல் இல்லை, லாரிகள் கடந்து அச்சுறுத்துவதில்லை, கந்தக நெடியற்ற ஒரு இயற்கை உலகம் இது. போய்ப்பாருங்கள். எனக்குள் படிமமாகவே இறக்கும் வரை  நின்று நிறக்கும் ஊர் வெனிஸ்.   A celebrit