Skip to main content

Posts

Showing posts from May 15, 2011

ஆக்டோப்பஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் (புதிய கவிதைத்தொடர்)

1. மறந்து விடுவதும் மன்னித்து விடுவதும் மனிதத்தன்மையா ? இலக்கிய வாசிப்புத் தளத்தில் மலேசிய வாசகர்கள் கவிதைத்துறையை விட்டு விலகிச்செல்வதாக எனக்குப்படுகிறது. இன்றைய நவீன கவிதைகள் இறுக்கமாகவும் இருண்மைப்போக்கையும் கடைபிடிப்பதால் வாசகர்களில் விலகலைத் தவிர்க்கமுடிவதில்லை.. பிடிக்காத உறவினரை, நண்பரைச் , சக மனிதரை நாம்ட எதேச்சையாகப் பார்த்தவுடன் பார்க்காதமாதிரியான பாவனையில், அவர் பார்வையே பிடிக்காமல் ஒதுங்கி நடந்து விடுவது போலவே கவிதை ஏட்டையும் விரல்களால் தள்ளிக் கடந்து போய்விடுகிறோம். படித்தாலும் புரியாது , வாசித்த மகிழ்வும் உண்டாகாது என்ற சுயகரிசனத்தில் நாம் அதனை நெருங்க மறுக்கிறோம். இது இலக்கியத்துக்கு உண்டாகிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. ஆனால் பல நல்ல கவிதைகளுக்குள் நம்மை வசீகரிக்கும் அம்சங்கள் நிறைய இருக்கும். நம்மை சுத்திகரித்து புனிதப்படுத்தும் முயற்சிகள் தென்படும். நம் ஆன்மாவை அலைக்கழிக்கும் ஆழமான செய்திகள் கிடைக்கும். நம் வாழ்வனுபவ சித்திரங்களைக்கூட கவிதையினூடே காணலாம். நம்மைப்பற்றிச் சொல்வது போலவும், நாம் அறிந்த மனிதரின் ரகசியங்களை வெளிப்படுத்துவது போலவும் சில சமயம