Skip to main content

Posts

Showing posts from May 29, 2011

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

4. உயிரினங்களுடனான  உன்னதத் தருணங்கள்.                   நான் லங்காவியில் இருந்த சமயம் என் மகன் நான்காம் ஆண்டில் என் பள்ளியிலேயே படித்து வந்தான். எல்லாச் சிறார்களுக்கும் இருக்கும் பிராணிகளின் மேலான ஈர்ப்பு இவனுக்கும் இருந்தது. ஒரு முறை ஒரு மணிப்புறாவைப்பிடித்து வந்து ஒரு கூட்டில் அடைத்துவைத்து பாதுகாக்க ஆரம்பித்தான். வானாளவிப்பறந்த பறவைகளை அடைத்துவைப்பது பாவச்செயல். அது அடிமைப் படுத்துவதற்கு ஈடானது என்று சொன்னேன். “இல்லாப்பா, கொஞ்ச நாள் வெளிய விட்ருவன், “ என்று எனக்குச் சமாதானம் சொல்லி வந்தான். கொஞ்ச நாள் கழித்து விடுவதற்குப் பதில் இப்போதே விட்ரலாம்ல’” என்றேன். அவனுக்கு அதில் திருப்தி இல்லை. அதனை மிக அருகில் இருந்து பார்க்கும் பரவசத்தில் அவன் இருந்தான். அகன்ற வெளியில் கைக்குக்கிடைக்காமல் பறந்து திறிந்ததை அருகில் வைத்துப் பார்க்கும் அவன் விருப்பத்துக்கு இணங்கினேன். கொஞ்ச நாள் அது வெளியில் பறந்து செல்லும் முயற்சியில் இறக்கை¨யைப் படபடத்துக்கொண்டிருந்தது. ஓரிரு வாரங்களுக்குப்பிறகு கொஞ்சம் அடங்கப் பழகிக்கொண்டது.    அந்தக்கூட்டுக்குள் இருக்கும் மணிப்புறாவை எப்போதும் பார்த்தவண்ணமே இருப்ப

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

3. ஆயுதங்கள் தின்று விட்ட ஆல்பங்கள்         போர்கள் விவரிக்க முடியாத சோதனைகள் நிறைந்தது. சங்கப்பாடலொன்றில் போர் நியாய முறைகளை எடுத்துச்சொல்கிறது. போரில் சம்பந்தபடாதவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதைக் கறாரான கொள்கையாகவே முன்வைக்கிறது. பெண்டிர் , குழந்தைகள், வாழ்வு தரும் மாடுகள், கோயில்கள் இவற்றுக்குப் போரால் சேதம் நேர்ந்துவிடக்கூடாது என்ற கரிசனத்தை முன்வைக்கிறது. அன்று அவர்கள் அதனைக்கடைபிடித்தார்கள். போரானலும் மனிதாபிமானப் பண்புகளைக் காட்டினார்கள். இன்று என்ன நடக்கிறது. எம் 16 ரக தானியங்கி (ஆட்டோமேட்டிக்) துப்பாக்கிகள் சகட்டு மேனிக்கு பொதுமக்களை சுட்டுத் தள்ளுகிறது. பள்ளிகள் கோயில்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. ஏவுகனைகள் மக்கள் குடியிருப்புப்பகுதிகளை குறிவைத்து தாக்குகிறது. கையெறிகுண்டுகள் கைக்குழந்தைகளையும் விடுவதில்லை. கன்னிவெடிகள் கால்களைபறித்து வாழ்நாளை முடமாக்கிவிடுகிறது. போர் விமானத்திலிருந்து வீசப்படும் குண்டுகள் விவசாய நிலத்தை ஊணமாக்குகிறது. ஹிரோசிமா நாகசாக்கி மீது வீசப்பட்ட ரசாயண குண்டு செய்த வரலாறு பதிவு செய்துவைத்த பிழையை இன்று படிப்பவர்களிடமும் ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது.