Skip to main content

Posts

நகரமயமாதலில் பலியாகும் எலிகள்

       நகரமயமாதலில் பலியாகும் எலிகள் (அ.பாண்டியனின் கரிப்புத் துளிகள் நாவலை முன்வைத்து.                                                கோ.புண்ணியவான்            மு ன்னால் தமிழக முதல்வர் சி என் அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘ பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள் , ஆனால் மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள் ’ என்று சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘ அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் , . நாம் நல்லாத்தான் இருக்கோம்போல ‘ என்று கற்பிதத்தை விதைத்துவிட்டுச் சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதைச் சொன்னவர் ஒரு பேரறிஞர்..தமிழ் கூறு நல்லுலகின் மதிக்கத்தக்க ஆளுமை. இன்றைக்கும் அண்ணா சொன்ன அந்த வரிகள் பொன்மொழிபோல மேடைகளில் கட்டுரைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வார்த்தைகள் மக்கள் திரளை குஷிப்படுத்தவும் கைதட்டல் வாங்கவும் சொல்லப்பட்டவை என்று எளிய மக்கள் அறிந்திருக்கவில்லை. மலேசியத் தமிழர்களின் உண்மை நிலை அதுவல்ல என்று அண்ணாவுக்கே தெரியும் , ஆனாலும் அவர் நெஞ்சரிய சொன்ன பாவனை சொற்கள் அவை. அவர் சொன்ன காலக்கட்டத்தில் மக்கள் தோட்டப் புறத்தில் கொத்தடி
Recent posts

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந