நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்வதில் பொதுவாகவே சிக்கல் உண்டு. ஒரு சராசரி வாசகனுக்கு மட்டுமல்ல ஒரு நல்ல நவீனக் கவிஞனும் இதே பிரச்னையைத்தான் எதிர்நோக்குகிறான். இது ஏனெனில் கவிதைகள் ஒருவரின் அக எழுச்சிலியிலிருந்து பிறக்கிறது. அவர் அதற்கு கொடுக்கும் வடிவம் அவரின் உள்மனத்தில் தோன்றியவண்ணமே அமைகிறது- ஒரு கச்சா பொருள் போல.அந்த அசல் வடிவத்தை தேடலின் வழி வாசித்து இன்புறக்கூடிய வடிவத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதற்குக் கொஞ்சம் உழைப்பு தேவை. இந்தப் புரிதல் சிக்கலைக் கலைவதற்கான ஒரு களமாகத்தான் வல்லினம் தமிழில் மிக முக்கியமான பாடைப்பாளுமைகளில் ஒருவரான யுவன் சந்தரசேகரைக் கொண்டுவந்திருந்தது. ஜூன் 11/12 முழுநாள்களும் அவருடனான உரையாடல் நிகழ்ச்சியாக இது நடந்து முடிந்திருக்கிறது. நிகழ்ச்சி நிறைவாகவும் பயனாகவும் இருந்தது. நிகழ்ச்சி தொய்வில்லாமல் நடந்ததற்குக் வல்லினம் இதனை கட்டமைத்த விதம்தாம் காரணம். இதனைச் சற்றும் சோர்வில்லாமல் வழிநடத்திய யுவனின் யுக்தியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னது, நான் ஆசிரியரல்ல, நீங்கள் மாணவர்களும் அல்ல. நாம் இரு தரப்பனருமே
சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள் 3 மதியம் 12.30 மணிக்குக் தேக்காவின் அப்போலோ கடையருகில் காத்திருப்பதாகச் சொல்லியிருந்தாரபொன்சுந்தரராசு. அதற்கான இட வரைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். நான் ஊட்லண்ஸ் ரைசிலிருந்து கிராப் எடுத்து அரை மணி நேரத்தில் அப்போலோவை கடையை அடைந்திருந்தேன். அவர் வெளியே நின்றிருந்தார். "டீ சாப்பிட்டுவிட்டு போலாம்" என்று அழைத்தார். நான் பசியாறிய பின்னரும் சாப்பிட்ட பின்னரும் டீ அருந்துவதில்லை என்றேன்.(இதெல்லாம் எதற்கு என்று கேட்பவர்க்கு. என் வரலாறை எழுத நேர்ந்தால் அதில் சேர்த்துக்கொள்ளத்தான். வேறதற்கு?) அங்கிருந்து ஷானாவாஸ் கடைக்கு அவர் காரில் பயணப்பட்டோம். தேக்காவில் இறங்கவில்லை. கடைத்தெருவில் எதுவும் வாங்குகிற சக்தியை என் மலேசிய ரிங்கிட் இழந்திருந்தது. சரியாக மணி 1.00க்கு ஷானவாஸ் கடையை அடைந்தோம். அது நாசி கண்டார் கடை. ஷானாநாஸ் வரவேற்று சிராங்கூன் டைம்ஸ் பொன்விழா இதழைக் கொடுத்தார்.ஆண்டடிதழ் என்றதால் தடினமாக இருந்தது. வழவழப்பான தாளின் தெளிவான எழுத்தில் வெளியாகும் இதழ். தரமான படைப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூர் திணையின் வரலாற்றை, பண்பாட்டை, அதன்