Skip to main content

ஆணாதிக்கம் பெண்ணடிமை என்ற மாயை

                                 ஜெயமோகனோடு சுவாமி பிரம்மானந்தா அவர்கள்
(அச்சில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வழங்கிய முன்னுரை இது.)


உலகில் இருவர் சேர்ந்திருப்பது மிகச்சிரமமான காரியம். ஏனெனில் அடிப்பபடையில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். உலகிலேயே சுதந்திர இச்சையுடன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் மட்டுமே. அவன் மற்றவர்களோடு பொருந்தி வாழ முடியாததற்கு காரணமே அவன் பகுத்தறிவு உள்ளவன் என்பதாலேயே. என்னதான் இயற்கையான உடற் தேவை காரணமாக அவன் கூடி வாழ விரும்பினாலும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே இருந்து அவனை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தன் உணர்ச்சியின் உச்ச நிலையைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் தேவைப்பட்டாலும் அந்த உறவுகளால் ஏற்படும் உரசல்களால் மீண்டும் மீண்டும் அந்நியபட்டே போகிறான். கொந்தளிப்புக்களையும் மனவலியையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் தேவைபட்டாலும் அவர்கள் மேல் உள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை மீண்டும் மீண்டும் அவனை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அவன் தன்னிலை தவிர்த்து வேறெதிலும் பாதுகாப்பை உணராத நிதர்சனம்தான். அதனால்தான் மனிதர்களுக்குக் கண்ணுக்குத்தெரியும்  மனித நம்பிக்கையைவிட  கண்ணுக்குத்தெரியாத தெயவ நம்பிக்கைகளில் அதிகப் பற்று ஏற்படுகிறது. எவ்வளவுதான் உறவுகளின்மேல் உள்ள நம்பிக்கை மனித வாழ்வுக்கு வலிமை சேர்த்தாலும் அந்தரங்கத்தில் அவன் தன்னைத் தனியனாகவே உண்ர்கிறான்.
இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அவன் உறவுகளைப் புறக்கணிக்கிறான்.
இந்த உறவுச்சிக்கல்களில் ஏற்படும் அவல நிலையையும் துரோகங்களையும் என்னிடம் கிடைத்த  இருபாலர் உறவு குறித்த கதைகளில் திரு கோ.புண்ணியவான் அவர்கள் நுணுக்கமாக ஆராய்கிறார். குறிப்பாக ஆண் பெண்  உறவுகளில் ஏற்படும் சிடுக்குகளை சிக்கெடுக்கும் முயற்சிகளில் அவர் கதைகள் முயற்சி செய்கின்றன.
         பொதுவாகவே இருபாலர் உறவுகளும் சுயநலமிக்கதாகவே காட்டப் படுகின்றன. தன்னுடைய தேகப்பசி  தீர்ந்த பின்னர் தூக்கி எறியப்படும் உறவுகள் இளமைக்கால மிகை உணர்ச்சியால் உந்தப்பட்டுப் பின்னர்  கைவிடப்படும் காதல்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தால் பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்தான் கதைக்களனாகின்றன.
         நீரிலிருந்தும் நழுவும் மீன்கள் கதையில் அம்மா என்ற மரபு சார்ந்த புனித பிம்பம் உடைத்தெரியப் படுவது நவீன கால அம்மாக்களை  அப்பட்டமாகம் படம் பிடித்து காட்டுகிறது. இதனை ஒரு சமூகப் பிரச்சினையாக முன்வைக்கும் ஆசிரியர் சமூகத்துக்கு சுயநல்மில்லா பொறுப்புமிக்க கடமையை உணர்த்த முயற்சி செய்கிறார்.
         பொதுவாகவே பெண்கள் பலவீனமானவர்கள் என்று கட்டமைக்கப்படும் நம் சமூகத்தில் ஒரு பெண் எவ்வித ஆண் துணையில்லாமல் தன்னிச்சையோடும் சுய மரியாதையோடும் வாழ முடியுமென்று எதிர்வினை ஆற்றுகிறார் கதை நாயகி. அடிப்படையில் ஆண் பெண் என்ற பேதம் பெரிதாக ஒன்றும் கிடையாது. இரு பாலருக்கும் பொது அம்சமாக இருப்பது நான் என்ற அகங்காரம்தான். ஆண்வர்க்க மேலாதிக்கத்தினால் பொறுமை, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற சமூகப் பயிற்சிகளால் பெண்களுக்குச் சற்று அடங்கி இருந்தாலும்  ஆழ்மனதில் வன்மமே குடிகொண்டுள்ளது. ஒரு ஆண்மகனுக்கு ஆணவம் என்பது தன் அடிப்படை குணம் என்று நினைக்கும் தோறும் பெண்களுக்கு அது அடக்கி ஆளும் ஆளுமையாக ஆழ்மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டே இருக்கிறது. தக்க தருணமும் அதற்கான சந்தர்ப்பமும் பிறக்கும்போது அது வன்முறையாகவே வெடித்து உறவுகளை உடைத்தெறிகிறது.
        அடிப்படையில் இரண்டு ஆணவங்களின் மோதல்தான் உறவுகளைப் பிய்த்து எறிகிறது  என்று தெரியாமல் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின்மேல் அடிமைப்படுத்துகிறது என்று வர்க்க சாயம் பூசுகிறது. இந்தக் குற்றஞ்சாட்டும் குணம் ஆணவத்திலிருந்து பிறந்து வந்ததுதான்.
        இவரின் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள் மூலமாக இக்கருத்தையே வாசக மனங்களுக்கு அறிவுறுத்துகிறார் என்று தோன்றுகிறது. என் வசம் கிடைத்த சில கதைகளைப்பற்றி கருத்து மட்டுமே இது.

சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி
கூலிம் தியான ஆசிரமம்

   
 


Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

அதிர்வுகள் அனுபவங்கள்

                                             புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது. அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது. அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில். யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்.. இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண...