Skip to main content

பேயச்சம்



கழுத்தைக்கடித்து
குருதியுறுஞ்சும் பேயாகவே
மாரியம்மன் கோயிலேறும்
சடக்கில் தலைகோதி நின்ற
புளிய மரம் அச்சுறுத்திய
காலம் ஒன்றுண்டு

அம்மாதான் சொல்வாள்
ரத்தக் காட்டேறி மரமென்று
 பழம் பறிக்க பள்ளி முடிந்து
கழியெறியும் போதெல்லாம்


அதன் குச்சியொடித்து
விலாசும்போதே
தோலுறித்த ரத்தத் தடையங்கள்
உறுதிப் படுத்தியது
உண்மைதானென்று

வெயில் விரட்டும்
அதன் குளிர் நிழலில்
வியர்வை நனைய
விளையாடும் போதில்
பேய் நினைவு மெல்ல
ஒதுங்கத் தொடங்கியது


நோய் நொடி விரட்டும்
அதன் இலை மருத்தவம்
பார்த்துப் பழகி
நன்பகல் நிழலாய்
கறையத்தொடங்கியது
கொஞ்சம்

மாநுட நலம் காக்கும்
கரிசனை நோக்கம்
மரத்தை நேசிக்க நேர்ந்தது

கருவாட்டுக் குழம்புக்கும்
ஆத்துமீன் கறிக்கும்
புளிப்பு
 சுவை கூட்டியபோதும்
பயம் பறந்தோடி
பாசம் மருவியது

காய்ந்து சுல்லிகள்
நின்றெரியும் தீயில்
தோளில் ஒட்டா புளியம் பழமாய்
அச்சம் ஒட்டாது ஓடியது

கிளையேறி ஒளிந்து
விளையாடும் விறுவிறுப்பில்
கிலி அருதியாய்
 அழிந்தொழிந்தது

கல்லெறிந்து கல்லெறிந்தே
காட்டேரியை
விரட்டி அடித்தோமோ என்னவோ


கித்தா மரங்கள் இலையுதிரில்
எலும்பாய்த் துருத்தி நின்றாலும்
தீராக் கானலை, புயல் மழையை
போராடி ஜெயித்து
நெடுங்காலமாய்
நின்று நிலைக்கும்
புளிய மரம்
சோர்வுறும் மக்களுக்குச்
சூட்டிக் காட்டியது
சுய இருப்பை


பேய் பயம் முற்றாய்
தீர்ந்த
ஒரு விடிகாலைப் பொழுதில்
வாழ்வுக்குப் பயந்த
நைலான் கயிற்றில் தொங்கிய
பேடியொருவனால்
உயிர்க்கத் தொடங்கியது
மீண்டும் பயம்













Comments

அருமையான இயல்பான அந்த நடை ஆஹா.... நடையழகா, நீவீர் வாழ்க.
MUNIANDY RAJ said…
arumaiyana kavithai....siruvayathu puliya marathu vasalukku kondu poi niruthiyatthu..
MUNIANDY RAJ said…
arumaiyana kavithai....appadiye siruvayathu puliya marathu vaasalil kondi poi niruthiyathu

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...