Skip to main content

சொல்றத சொல்லிப்புடுறேன்

ஐநூறு கொடுத்தான்னு
 அவனுக்கே ஓட்டுன்னா?
ஆயுள் முழுக்க ஒதுக்கனானே
 அதுக்கென்ன அர்த்தம்ன்னேன்?

நம்மல ஓரங்கட்டி
 ஒசத்திப்புட்டான் தஞ்சனத்த
 சும்மா தூசுதட்டி போட்டாப்புல
 மறந்துப்புட்டான் என் எனத்த

 கோயிலுக்கு கொடுத்தான்னு
 கையெடுத்து கும்பிடுறியே
 சாமியெல்லாம் ஒடச்சப்ப்போ
 கைபெசஞ்சி நின்னேல்லா

 பள்ளிக்கு தந்தான்னு
 பல்லிளிச்சு நிக்கிறியே
 இப்பமட்டும் செய்றியேன்னு
 எப்பியாவது கேட்டியா?

கைக்கட்டி கைகட்டி
 காலத்த ஓட்டாத
 டைகட்டி மெடுக்கா
 இருக்கத்தான் வேணுங்கிறேன்

 கொடுத்த தெல்லாம் வாங்கிக்கோ
 வேணான்னு தடுக்கல
 கோடு போட்ட வாழ்க்கத்தான்
 வாழனுந்தான் கேட்டுக்கோ

 நம்ம புள்ள நாளைக்கு
 நல்லாத்தான் இருக்கனும்னா
 நாயக் கட்டி இழுத்தாந்து
 நடு வூட்ல வைக்காத

 கூழாங்கல்ல தங்கம்ன்னு
 கும்பிட்டு ஏற்காத
 வைரத்த சோரம்ன்னும்
 வந்த வழி அனுப்பாத

 எப்பியோ நடந்திடுச்சு
 இப்போ அதுக்கென்னாங்கிற
 அப்போ செஞ்சதெல்லாம்
 இப்பியுமில்ல பாதிக்குது!

அரிதாரம் பூசித்தான்
 அடுக்கு மொழி பேசுவான்
 ஆட்சிய புடிச்சான்னா
 அம்புடுத்தான் புரிஞ்சிக்கோ!

வக்கனையா எழுதிப்புட்டேன்
 வகை வகையா சொல்லிப்புட்டேன்
 தொகையெல்லாம் கெடைக்குதேன்னு
 தொலச்சிப்புட்டு ஏங்காத....!

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...