Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

2. காத்திருப்பு





மாலை ஆறரை மணிக்குத்தான் எங்களின் விமானப் பயணம் தொடங்கும். நானும் மனைவியும் (என் மனைவியும்) காலை 11.30க்கெல்லாம் கே.எல்.ஐ.ஏ விமானத்தளத்தில் வந்து இறங்விட்டோம். விமானம் ஏறும் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்    இளைய   மகன் முதல்நாளே கே,எல்லில் ஒரு திருமண நிகழ்வுக்கு
வந்துவிட்டிருந்தான்.  வந்த உடனே கூப்பிடுங்கள் , கே எல் பிரிக்பில்ஸில் பகலுணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விமானத் தளத்தில் விட்டுவிடுகிறேன் என்றான். அந்தத் திட்டம் சரியாக வராது. அவன் இருக்கும் இடத்திலிருந்து விமான நிலையத்துக்கு ஒன்றரை நேரப் பயணம். பயணத்துக்கே நேரம் ஓடிவிடும். அதனால் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். அங்கேயே பகலுணவு உண்டோம். இரண்டாம் தளத்தில் கொஞ்சம் மலிவாகத்தான் உணவு கிடைக்கிறது. ஆனால் பசிக்குச் சாப்பிடலாம். எனவே பசித்தவுடன் சாப்பிடுவதுதான் உணவைச் சுவையாக்கும் சமரச உத்தி.






அன்றைக்கு விமானத் தளத்தைக் கவனத்துடன் பார்வையிட்டேன். நான் ஓரிரு முறை வந்தபோது அதன் கட்டமைப்பு குழப்பமானதாகவே பட்டது. கொஞ்சம் நிதானித்துச் சுற்றிப் பார்த்தபோது குழப்பமெல்லாம் நாமே தகவமைத்துக்கொண்டது என்றே பட்டது. பதற்றமில்லாமல் அவதானித்தால் தெளிவான பார்வை கிட்டுகிறது.

மணி நான்குக்கெல்லாம் எங்களோடு பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவராக
வந்து சேர்ந்தார்கள்.
காலையில் குளித்துவிட்டு வந்தாலும். உடல் வியர்வையில் கச கசத்தது. விமானத்தில் நன்றாக உறங்குவதற்கு நான் கழிவறையிலேயே
குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தேன். கழிவறையில் குளிப்பதில் சற்று அடக்கம் இருக்கவேண்டும்.தலையில் ஊற்றும் நீர் அடுத்தடுத்த கழிவரைக்கு நகரும் சாத்தியம் அதிகம். சமதரை. கழிவறைக்கு வெளியேயும் தண்ணீர் தலை காட்டும், மற்றவர்
காலணியை நனைக்கலாம். கொக்கியில் தொங்கப்போட்ட ஆடைகள் தண்ணீர் சிதறி நனைந்தும் போகலாம்.








எப்படியோ குளித்துவிட்டு வெளியே வந்தேன் . யாரும் என்னை  விநோதமாகப் பார்க்கிறார்களா என்ற சந்தேகம். நான் அவர்களை ஏறிட்டுப் பார்த்தால்தானே ! தண்ணீர் நழுவுவதுபோல நானும் மெல்ல வெளியேறிவிட்டேன்.

செக் இன் கௌண்டரில் எல்லாரும் வரிசையில் நின்றிருந்தார்கள். என் மனைவியைக் காணோம். நான் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.
அவள் அதிகாரம், மிரட்டல், உருட்டலெல்லாம் வீட்டில்தான்.  வெளியே வந்தால் அதெல்லாம் எங்கே போய்விடுமென்ற மர்மம் புரியவில்லை. இனிமே என் ஆட்டம் தொடங்கி விடும். நான் வெளியில் புலியல்லவா! 

அவளை அழைத்துக்கொண்டு செக் இன் கௌண்டரில் பயணப்  பைகளைப் போட்டுவிட்டு விமானத்தை நோக்கி நடந்தோம்.

ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் கருமித்தனம், சுரண்டல் எல்லாம் மாஸ் விமான நிறுவனத்தில் கிடையாது. ஏர் ஆசியா விமானத்தின் இருக்கையில் அமர்ந்த பின்னர் கீழே விழுந்த எதையும் எடுப்பதுஇமசையாகிவிடும். பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரை உரசாமல் இடிக்காமல் பயணம் செய்வது முடியாத காரியம். அதிலும் உடல் கனத்த ஒருவர் அருகில் மாட்டிக் கொண்டால் அவரோடு நாமும் சேர்ந்து சிரமப் படவேண்டி வரும். குண்டானவர் கூண்டில் மாட்டிக் கொண்ட குருவியாகி விடுவார் இலக்கைப் போய்ச் சேரும் வரை பிரசவ வேதனைப் படுவார். அங்காடி வியாபாரமெல்லாம் விமானத்தின் உள்ளேயே நடக்கும். அப்புறம் ஏன் டோனி பெர்னாண்டஸ் மலேசியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வரமுடியாது?
 
 



தொடரும்........

Comments

MAS விமானத்திலும் இந்த இடிபாடு சிக்கல்கள் எல்லாமும் இருக்கே சார். மாஸில் இன்னும் மோசம், காதுகளைக் கிழித்துக்கொண்டு விமானம் பறக்கின்ற சத்தம் தலைவலினைக் கொடுக்கும். அனுபவப்பட்டதில்லையா?

வீட்டில் நீங்கள் பூனை. வெளியே புலியா? சிரிப்புதான் போங்க உங்களின் லொள்ளு..

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த