Skip to main content

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)


 8.குழப்பம் என்று தலைப்பிடல் சரியாக , அதனால் தெளிவு என்ற புதுத் தலைப்பு




மணிமொழி, பூங்குழலி. விஜயா
                                        
காலை 9.00 மணிக்கு பினாங்கு பொட்டேனிக்கல் பூங்காவிலிருந்து கொடிமலைக்குச் செல்வதற்கு நானும் பாலமுருகனும் முதலில் போய்ச் சேர்ந்தோம்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு மழைநீர் பூமியை நனைத்திருந்தது .முதுமை தட்டிய அகன்று விரிந்து மரங்கலிருந்து பூக்கள் காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தது.
விஜயா

கொடிமலை மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளம். முன்னர் சிலமுறை வந்திருக்கிறேன். மலை உச்சியை அடைவதற்கும் மின்சார ரயிலில் மலைப் பயணம் செய்ய வேண்டும். மலை உச்சியை நோக்கிச் செங்குத்தாக ஏறும். ரயில் அப்படியே மல்லாக்க கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சமேற்படும். கிட்டதட்ட மண்ணின் மீது பயணிக்கும் கேபல் கார் போல.ரயில் பாதி தொலைவில் நின்று இன்னொன்றில் ஏறித்தான் பயணத்தைத் தொடரவேண்டும்.
மின்சார ரயில்

ஒரே ரயிலில் உச்சிக்குப் போகலாமே ஏன் இடையில் ரயிலை மாற்றவேண்டும்? என்று கேட்டு ஒரு வெள்ளைக்காரப் பயணி என் அறிவைச் சோதித்துப் பார்த்தான். இரண்டாவது  ரயில் மலை உச்சியை அடைய கூடுதல் சக்திக்கு அதிக வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது அதனால் என்றேன். அன்றுதான் எனக்கும் அறிவியல் மூளை செயல்படுகிறது என்று கண்டுபிடித்தேன். இது நடந்தது என் 17வது வயதில்.

முகாம் நண்பர்கள்

எங்களுக்கு முன்னாலேயெ ஒரு குழு கொடிமலைக்கு புறபபட்டிருந்தது. ஏழு பேர் பயணிக்ககூடிய ஒரு லேண்ட் ரோவரில் நான், பாலா, விஜயா, பூங்குழலி வீரன், தினா  இன்னும் சில நண்பர்களோடு பயணிக்கத் தொடங்கினோம்.மலை நெளிந்து ஏறும் தார் சாலை. ஜெராய் மலையை விட இதன் சாலை ஏற ஏற மேடு உயர்ந்துகொண்டே போனது. கீழே பார்க்கும்தோறும் மலை தன் உயரத் திமிறால் மதர்த்து நின்றது. பயணம் அரை மணி நேரம் பிடித்தது. உச்சியிலிருந்து பினாங்கு கடற்கரை கட்டடங்கள், கடலை ஒட்டி வளர்ந்து எங்களை அந்நாந்து பார்த்துக்கொண்டிருந்தது. பச்சை போர்த்திய மலையும் மரங்களும் , வெளுத்து விரிந்த கடலும், கடலை ஊர்ந்து போகும் இரணடு மிக நீண்ட பாலங்களும் ஒரு அகன்ற காட்சியை காட்டிநின்றன.
முகாம் தொடங்கும் முன்னர்

மெல்ல மெல்ல அனைவரும் வந்து சேர்ந்தனர். 31 பேர். நாங்கள் திட்டமிட்டது 50 பேர். இந்த முகாமுக்கு ஆள் பிடிக்க இன்றைக்குள்ள நவீன ஊடகங்கள் எல்லாவற்றையைம் பயன்படுத்தியும் 31 பேர் மட்டுமே சேர்க்கமுடிந்தது. அவர்களில் வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் ஒரு 10 பேர். எழுதுபவர்கள் 20 பேர். சில எழுத்தாளரல்லாதவர்களோடு பேசும்போது அவர்கள் ஆழமாகவே வாசித்திருக்கிறார்கள் என்று கணிக்க முடிந்தது. அது போதும். முகாமை நகர்ந்திவிடாலம் என்று தைரியம் வந்தது.

அது ஒரு பெரிய பங்களா. வெளைக்காரன் ஆதிக்கத்தில் இருந்தபோது மலை உச்சியே அவனுக்குச் சொர்க்கம். ரப்பர் தோட்டப் புறங்களிலும் அவன்  குடியிருக்க மலை உச்சியைத் தான் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் விட்டுப்போனதும், 'கருப்புத் துரைகள்' (இந்திய மேனேஜர்கள்) அங்கே புலம் பெயர்ந்தனர். இன்றைக்கு மலசியாவில் ரப்பர் தோட்டங்கள் இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது. இன்றைய தலை முறையினரில் ரப்பர் மரங்களைப் பார்க்காதவர்கள் இருக்கிறார்கள்!

பகல் உணவுக்குப் பிறகு முகாம் தொடங்கியது.

முகாம் தொடங்கியது
தொடரும்......

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...