Skip to main content

Posts

பொறுமையாக இருங்கள்

நீங்கள் எதிர்பார்க்கும் என் பதில்கள் விரைவில் அரங்கேறும் தவணை முறையில் மகனின் திருமண வேலையாக இருக்கிறேன் முடிந்ததும் சந்திப்பேன்

புதிர்

எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்புச்செய்தியின் புதிர்த்தன்மையோடு புறப்பட்டுவிடுகிறார் ஊகித்தறியா ஆர்வத்தில் கோடிட்ட இடங்களை நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது அவரின் பிறகு சொல்கிறேன் ஒற்றைசெய்தியைத்தாண்டி என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன புதிர்கள். கோ.புண்ணியவான். மலேசியா Ko.punniavan@gmail.com

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்

கோ.புண்ணியவான் கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்கு தர வேண்டிய கடன் தொகை மலேசிய ரிங்கிட் 1240. மலிகைக்கடைக்கு 230. வாடகை வீட்டுக்கு மூன்று மாத பாக்கி. ஒரு மாதத்துக்கு முன்னூறென்றால் மூன்று மாதத்துக்கும் சேர்த்து 900 ஆயிற்று. அவரின் ஆதர்ஸ வாசகர் ஒருவருக்கு 80 வெள்ளி. அவர் வீட்டைக்காலி செய்து ஒரு வாரம் கழித்தே சுப்பிரமணியத்துக்கும் மற்றெல்லா கடன்காரனுக்கும் வெளிச்சமானது. அவர் குடி பெயர்ந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்துபோனார்களே ஒழிய எங்கே போனார் என்று தெரியாமல் போனது வேதனையளித்தது.. அவ்வப்போது அவரைப்பற்றி வரும் பத்திரிகை செய்திகளைப் பார்த்தால்தான் ஆயிற்று. மற்றவர்களுக்கு இன்னும் தெரியாது. கடன்காரர்கள் எல்லாருமே இளிச்சவாயன்கள் அல்ல. கடன் கட்டிமுடிக்கும் வரை விட்டேனா பார் என்று விரட்டிப்பிடித்தவனும் உண்டு. ஒரு முறை குடியிருந்த ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூருக்கும் போனபோது விபரமான கடன்காரன் ஒருவனுக்கு ஒரு செய்தியைப் பத்திரிகையில் பார்க்கிறான். பத்திரிகை செய்தி பின் வருமாறு. கடந்த ஆண்டு மறைந்த பெரும்பு...

நீ அண்ணாந்து பார், நான் செம்மாந்திருப்பேன்

நீ ஆழ்கடலுக்குள் மூழ்கி மூச்சடக்கி முத்து கொண்டு வா நான் கப்பலில் மதுக்கோப்பையை கையிலேந்தியபடியே அதை வாங்கிக்கொள்கிறேன் நீ பாதாள சுரங்கத்திலிறங்கி வைரம் கொண்டு வா நான் நான் பாதுகாப்பு வளையத்துக்குள் பத்திரமாய்க் காத்திருக்கிறேன் நீ மரத்தில் தாவி மது இறக்கி வா நான் மாதுவோடு என்னை மறந்திருப்பேன் நீ அட்டைக்கும் கொசுவுக்கும் ரத்த தானம் செய்து ரப்பர் கொண்டு வா நானென் பாதங்களில் முள் பாயாதபடி பார்த்துக்கொள்கிறேன் நான் என் பிள்ளைகளை செல்வச் சீமானாக்குகிறேன் உன் பிள்ளையை உனக்கான அடுத்த வாரிசாக்க உறுதி தருகிறேன் நீ பழம்கொண்டுவா கண்டிப்பாய் உனக்கு நான் கொட்டை தருகிறேன் “ந்தா மேதின பூ வைத்துக்கொள் வாழ்த்துகள்.......” கோ.புண்ணியவான்

முதலாளித்துவத்தின் முதலீடு -வளைந்துபோய்விட்ட முதுகு

முதலாளித்துவத்தின் முதலீடு - வளைந்துபோய்விட்ட முதுகு எத்தனை நூற்றாண்டுகள் இன்னும் வினாக்குறி வாழ்வுதான் எத்தனை பல்லாண்டுகள் இன்னும் நாய்வால் அதிகாரம்தான் அந்தி வெயிலின்போது மட்டும்தான் இவன் நிழல் நீண்டு வளர்கிறது நிஜ வாழ்வில் உச்சிவெயில் நிலைதான் நாய்வால்கள் வெளிச்சத்தை விழுங்கிகொள்ள வினாக்குறிகள் இருட்டில் தடம் தேடுகின்றன தன் வியர்வை முத்துக்களை மாலையாக்கிக்கொள்பவனிடம் விலைபோவதே இவன் விதி கோ.புண்ணியவான்

இளகிய மனமுள்ளோர் இதப்படிக்காதீங்க

சின்ன வயசுல ஒரு கதை சொல்வாங்கஇ ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு அரக்கனோட உயிர்இ ஒரு கிளிட்ட இருக்குஇ அந்த கிளிய ஒரு ராஜகுமாரன் போய் கொன்னுட்டு தன்னோட ராணிய காப்பாத்துனான்னு… கேள்விபட்டிருக்கீங்களா? கண்டிப்பாகேள்விபட்டிருப்பீங்க. ஏன்னாஇ அது சின்ன வயசு கதை. இப்ப பெரிய வயசுல ஒரு கதை சொல்றேன். ஒரு பாலம் தாண்டிஇ ஒரு கோயில் இருக்கு. அந்த பாலத்துக்கு அடியில ஒரே தண்ணிஇ கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தண்ணி. அத கடல்னு சொல்றாங்க. அந்தக் கடல்ல என்ன நடந்தாலும் யாருக்கும் எதுவுமே தெரியாது. அந்தக் கோயில்ல ஒரு சாமி இருக்கு. அந்த சாமியால கூட உதவ முடியாம கடலுக்கு பக்கத்துல நிறைய மக்கள் இருக்காங்க. உங்களப் போலஇ என்னப் போல … சொல்லப் போனா ஒரு லட்சம் மக்கள். எந்த ராஜகுமாரனும் இதுவரைக்கும் வந்தபாடில்ல. இத கேள்விபட்டிருக்கீங்களா?. கண்டிப்பா கேள்வி பட்டிருக்கமாட்டீங்க. ஏன்னாஇ அந்த மக்களோட வாழ்க்கை முறைக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஒரே ஒரு சம்மந்தம் வேணும்னா இருக்கும். அது என்னான்னு அப்புறம் சொல்றேன். இந்த கோயிலும்இ பாலமும்இ எங்க இருக்குன்னு யோசிச்சீங்களா? தெரியலேனா பரவாயில்லைஇ ரொம்ப யோசிக்...

சினிமாட் தாக்கம்

சினிமா தாக்கம் சினிமாவைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளும் அறிவு இதனை தாண்டி தமிழ் இலக்கிய படைப்புகளைப் படிக்க முன்வந்தோர் இன்றில்லையோ என்றெண்ணும் அளவுக்கு இன்றைய நிலைமை உள்ளது. ஜனரஞ்சகமான காட்சிகள்இ கருத்தைஇ கவனத்தைக் கவருவதில் அதிசயமில்லைதான். எழுத்தையும்இ படைப்பையும் அப்படி மாற்றுவதற்கான வாய்ப்புகள் வருமா? எப்படிப் படைத்தாலும் படிப்பவரின் எண்ணிக்கையில் ஏற்றமில்லை. ஊடகங்களின் ஆகிரமிப்பில் உணர்வுகளைத் தொலைத்து விட்டு நிற்கிறோமோ என்ற எண்ண அச்சுறுத்துகிறது. கடிதம் எழுதச் சொல்லிக்கொடுத்தால் ஒரு மாணவன் கேட்கிறான் எதற்கு இதைப் படிக்க வேண்டும் அலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொல்லி விடலாமே என்று. துரு துரு பையனின் கேள்விக்குத் திரு திரு என்று விழித்து விட்டு சொன்னேன் சோதனைக்கு வரும் படி என்று. அவனுக்கு என்ன சொல்லி உணர்த்த வேண்டும். எப்படி சொன்னால் புரிந்து கொள்வான் என்று தெரியவில்லை. இப்படி தான் சினிமாவும் என்று ஒரு இயல்பான பதிலைத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டுமோ? தெரியவில்லை. சினிமாவும் ஓர் இலக்கியமாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால்இ அது பழங்கதையோ. நம்மவர்களுக்குச் சிறந்த பொழுது போக்கென்று ஒ...