Skip to main content

Posts

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

              என் மனைவி தமிழ் நாட்டு சுற்றுப் பயணத்துக்கு அனுப்பியிருந்தேன். எனக்கு சேலை கடையென்றால் அலர்ஜி. இரண்டு மூன்று நாட்கள் முழுக்க கால்கடுக்க சேலைக்கடையிலும் , கடைத்தெருவில் அலைவதை நினைத்தாலே கால்கள் கடுக்கத் தொடங்கிவிடும். மகள் குடும்பத்தோடு அவள் ஜூலை 29ல் போய்விட்டிருந்தாள். கிட்டதட்ட 11 நாட்களை எப்படிக் கழிப்பது என்ற பிரச்னை. நீண்ட நாட்களாவே பானு விடுமுறையைக் கழிக்க சொங்க்லாக்-தாய்லாந்து போகலாம் என்று அழைத்துக் கொண்டிருந்தார். நான் நாலைந்து முறை பார்த்த  ஊர்தான். மிகுந்த ஆரவ்மில்லை. காரில் போய்விட்டு வருவதற்கு உசிதாமான இடம். இரண்டரை மணி நேரப் பயணம்தான். எனக்கும் போரடித்துக் கொண்டிருந்தது. சரியென்று பானுவோடு கிளம்பிவிட்டேன். மனைவி இல்லாத வேளையில் பானுவோடா? அதுவும் தாய்லாந்துக்கா? என்ற உங்கள் எண்ணம் கோணாலாவது தெரிகிறது. பானு என் நடைப் பயிற்சி நண்பர். ஆடவர். பானு  நாயர். போதுமா? 2 ஜூலை காலை 7.30க்கெல்லாம் என்னை என் வீட்டில் ஏற்றிக்கொண்டு கிளம்பி விட்டார். மணி 10 வாக்கில் புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையை அடைந்தோம். சனிக்கிழமைய...

தீக்குள் விரலை வைத்தால் (சிறுகதை)

                                                  தீக்குள் விரலை வைத்தால்                                                                 (சிறுகதை)                                                                                          கோ.புண்ணியவான், மலேசியா                                       கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு ...

பின் இருக்கையில் ஒரு கிழவி

சிறுகதை பின் இருக்கையில் ஒரு கிழவி ஊர் அடங்கிய நேரம். எல்லா ஊரிலும் ஒரே நேரத்தில் ஊர் அடங்கிவிடுவதில்லை.  உட்புறப்பகுதியில் அமைந்தது என்பதால் எங்கள் ஊர்  இரவு இளமையாக இருக்கும்போதே அடங்கி விடும். தனித்தனி நிலப்பட்டாவில் கட்டப்பட்ட நான்கு வீடுகளுக்கு மத்தியில் அடக்கமாய் அமைந்திருந்தது. உள் தாழ்ப்பாளிட்டு விருந்தினர் அறை விளக்கை அடைத்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தபோது  கதவு பவ்வியமாக  தட்டப்படும் ஓசை கேட்டது. அந்த நேரத்தில் கதவு தட்டப்படுவது அபூர்வமாகவே நடக்கும். அபூர்வம் என்று சொல்வதைவிட அறவே இருக்காது எனச் சொல்வதே சரியானது. என் மனைவியும் நானும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ‘யாரது இந்த நேரத்தில்?” என்ற புதிர்க் கணைகள் கண்களில் தெறித்தன. மூடப்பட்ட கதவு வழியே பார்த்து தெரிந்துகொள்வதற்கு அது நூதன கதவு அல்ல. திருடன் வரும் அகால நேரமல்ல அது. உறவினராகவும் இருக்க வாய்ப்பில்லை! கதவைத் திறந்தேன். முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆளாக இருக்கும் என்று கணிக்கும் முன்னரே சாராய வாடை திரண்டு வந்து தாக்கியது. எங்கோ பார்த்த முகம் அல்லது முன்பின் அறிமுகம...

படைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்

சிறுகதை படைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்                                                                                          1 கவிஞர் சோழவேந்தனின் ‘கரும்புத்தோட்டம்’ நூல் வெளியீட்டு அழைப்பிதழ் சேர்ந்த சில மணி நேரத்திலேயே அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும் வந்தது. தபால் மூலம் வந்து சேரும் நேரத்தை ஜோசியரிடம் கணித்திருப்பார் போலும்! அழைப்பிதழ் கிடைத்திருக்கும் என்றும் நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு வழங்கும்படியும் பின்னூட்டத் தகவலுக்காக போன் செய்தேன் என்றார். அவர் நூல்வெளியீட்டை சற்றுத் தடபுடலாகவே செய்யவிருப்பதாகச் சொன்னபோது எனக்குக் கொசுறாக கல்யாண மேளம் நாதஸ்வர ஓசை கேட்டது. உற்றார் உறவினரையும் நண்பர்களையும் எழுத்தாளர்களையயும், தான் வாடிக்கையாளனாக இருக்கும் மீன்காரன், மளிகைக் கடைக் காரர் தன்னைச் சிகை அலங்காரம் செய்பவர், தினசரி கடந்து போகும்போ...

சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு- பாகம் 3

  சிங்கப்பூரின் தங்க மீன்கள்- நாவல் பயிலரங்கு-                                                   பாகம் 3                எனக்குப் புது இடம் என்றால் கொஞ்சம் அலர்ஜி. தூக்கம் பிடிக்கவில்லை. நான் பின்னிரவு இரண்டு மணிக்குமேல்தான் தூங்கிப்பழக்கம். இந்த உடல்  அதற்குப் பழகிவிட்டது. வானொலியில் அலைவரிசை தேடிக்கொண்டிருந்த விதாயாசகர் வானொலியில் கைவைத்த படியே ஆழ்நிலை தியானத்துக்குள் போய்விட்டார். தூக்கமெல்லாம் ஒரு கொடுப்பினை. எனக்கு எப்போது தூக்கம் வருமோ? அங் மோகியூ நூலக்த்தின் தமிழ்ப்பகுதியின் ஒரு மூலை.    "காலை 9.30க்கெல்லாம் நாவல் பயிலரங்கு ஆரம்பித்துவிடவேண்டும் பாஸ்".  என்று பாலுமணிமாறன் எச்சரிக்கை  கொடுதபபடிதான் முதல் நாள் வழியனுப்பி வைத்தார். எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தயாராகிக்கொண்டிருந்தேன். வித்யா "யான்யா அவசரப்படுற...சொன்ன நேரத்துல தொட்ங்காதுய்யா," என்றார். "இது என்ன மலேசியாவா?" என்ற...

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- பாகம் 2 முதல்நாள் கலந்துரையாடலைப் பற்றி இராஜ கணேஷின் முகநூல் பதிவு தெளிவாக இருந்தது. நானும் எழுதினால் சுவை திகட்டிவிடலாம். எனவே நான் நேற்று எழுதிய பதிவில் லிங்க் கொடுத்திருக்கிறேன். Balu Manimaran   என்ற முகநூல் தளத்தில்  வாசிக்கலாம். மலேசிய இலக்கியம் குறித்து பெரும்பாலான தீவிர எழுத்தாளர் பார்வை ஒன்று போலத்தான் இருக்கும். ஆனால் மலேசிய இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு சிலர் மட்டுமே. அவர்கள் இலக்கிய அமைப்புகள் வழி பதவியைப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள். அவர்கள் அமைப்பின் பெய்ர் காப்பாற்றப்படவேண்டுமல்லவா? ஒருமுறை ஒரு தினசரி பத்திரிகை ஒரு அறிக்கை விட்டிருந்தது. சிறுகதை பக்கத்தில் அவ்வறிக்கையை வாசிக்க நேர்ந்தவுடன் எனக்குக் கடுப்பைக் கிளர்த்தியது.  சிறுகதை எழுதுபவர்கள் நான்கு பக்கங்களுக்குள் எழுதினால் மட்டுமே பிரசுரமாகும், அது பாதி பக்கத்துக்குள் வரவேண்டும் என்று குறிப்பிடிருந்தது அறிக்கை.  உப்பு, புளி, மிளகாய், கடுகு, தாளிப்பு, சோம்பு இவற்றை நிரப்பும் ஜாடியாக பத்திரிகை பக்கத்தை அளவோடு ஒதுக்குகிறார்கள் எட...

சிங்கப்பூரின் தங்கமீன்கள்- நாவல் பயிலரங்கு.

சிங்கப்பூரின் தங்கமீன்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னால் சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்திலிருந்து கவிஞர் பாலு மணிமாறன் அழைத்திருந்தார்.ஏப்ரல் 9 /10 தேதிகளில் சிங்கை வரமுடியுமா என்று கேட்டிருந்தார். நாவல் பயிலரங்கு நடத்தித் தரவேண்டும் என்று கேட்டார். எனக்குத் சற்று திகைப்பை ஊட்டியது அவர் கேட்டது. பிரபஞ்சன் வருவதாக அறிவிப்பு வந்ததே என்றேன். உடல் நலக்குறைவால் அவர் பயணம் செய்ய இயலாது என்றார். அவரிடம் இட்ட பணியைத்தான் உங்களிடம் தருவதாக இருக்கிறேன் நீங்கள் வரவேண்டும் என்றார். அதில் கட்டாயம் என்ற வார்த்தை சேர்க்கவில்லையே தவிர தொனியில் அது தெறித்திருந்தது. என்னால் அதனை ஏற்கவும் முடியவில்லை இழக்கவும் மனமில்லை. நான் திணறினேன் பதில் சொல்ல. "சும்மா வாங்க பாஸ், ரொம்ப யோசிக்காதீங்க, உங்கள் திறமை எனக்குத் தெரியாதா!".என்று என்னை ஏற்றிவிட்டார். நான் சரி வருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னால் பதற்றத்தையும் ஏற்றிக்கொண்டேன்."எப்போ நிகழ்ச்சி?" என்றேன். 9/10 தேதிகளில் என்றார். எண்ணிப்பார்த்தேன் பத்தே நாட்கள்தான் எஞ்சி இருந்தன. ஒரு நாள் கருத்தரங்கு என்று  சொல்லிப்பார்த்தேன். மனம் ப...