Skip to main content
            
(எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு
இக்கவிதையைக் சமர்ப்பிக்கிறேன். )

  -63

எனக்கின்று -63
நீங்கள் வாழ்த்துக்கூறி
என்னை மீட்டுருவாக்கியதால்

என்னைச்சுற்றி
ஆனந்த ஒளிவட்டம்
என்னாளும் மிதந்திருப்பதால்

என் வெற்றி இன்னதென்று
என் பிரிய எதிரிகள்
இனங்காட்டுவதால்

என்னைச் சூழ்ந்த காற்று
தீபத்தை வேண்டுமானால்
தீர்த்துக் கட்டலாம்
தீயை அல்லவே... என்பதால்

என் நரை
என் வரையறை
இதுவென்று வழி சொல்வதால்
அது என்னை மென்மேலும்
வெள்ளையாக்குவதால்

என் முதுமை
என் இளமையிலிருந்தே
பிறந்ததால்
என் அனுபவம்
கடவுளாகி
என்னைக் கைப்பிடித்து
இட்டுச்செல்வதால்

தட்டுகின்ற கதவுகள்
இன்றில்லையென்றாலும்
என்றாவது திறந்தே
தீரும் என்பதால்

கர்ணன் தொடையைத்
துளைத்த
கவலை வண்டு
என் கவனத்துக்கு அப்பால்
இருப்பதால்

இந்தக் கவிதைக்கான
கரு
இன்று என்னிலிருந்து
வித்தானதால்

மரணம்
மறுபிறப்புக்கான
வாசலைத் திறந்துவிட்டதால்
இன்று எனக்கு
மைனஸ் 63 தானே?.

Comments

MUNIANDY RAJ said…
தங்கள் கவிதை மிக அருமையாக இருக்கிறது......காலம் கிழித்துப்போடும் வயது, கவிதையாய் மிளிரும்போது தனி அழகுதான்.
MUNIANDY RAJ said…
ாழ்க்கையே போராட்டம் நிறைந்ததுதான்....அதில் வெற்றிகரமாக நீந்தி வருபவனே வாழ்வை வெல்கிறான்...மற்றவன் மூழ்கிச் சாகிறான்..
MUNIANDY RAJ said…
தங்கள் கவிதை மிக அழகாக, அருமையாக உள்ளது. காலம் கிழித்துப் போடும் வயது, கவிதையாய் உருவாகும்போத், அதன் அழகே தனிதான்..
உண்மையில் கழித்தல் 63'றேதான்.

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

அதிர்வுகள் அனுபவங்கள்

                                             புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது. அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது. அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில். யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்.. இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண...