Skip to main content

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

 4.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

 


  

நான் கலந்துகொள்ளும் உரையாடல் நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்கு பினாங்கில் நடக்கவிருந்தது. இது எனக்கு முதல் அனைத்துலக மேடை என்பதால் சற்றே பதட்டமாகத்தான் இருந்தது. மேடை ஏறுபவர் பெரும்பாலானவர்க்கு பதட்ட உணர்வு தவிர்க்க முடியாதது. எத்தனையோ மேடையைக் கண்டாயிற்று ஆனால் இந்தப் பதட்ட உணர்வுமட்டும் கழட்டிக்கொள்வதில்லை. மேடை ஏறியவுடன் அது தானாகவே கழண்டு கொள்கிறது. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி என்பதாலும் அறிவார்ந்து பேசவேண்டும் என்பதாலும், அதுவும் அறிவார்ந்த சூழலில் பேசவேண்டும் என்பதால்  உண்டாகும் உள்ளுணர்வு அது. அந்தப் படபடப்பு ஜெயமோகன் போன்ற இமையங்களுக்கே உண்டாகிறதென்றால் நான்  எம்மாத்திரம்? உள்ளபடியே நிஜ வாழ்க்கையில்  அனுபவிப்பதைவிட கற்பனையில்தான் நிறைய உணர்ச்சிக்கொந்தளிப்பை அனுபவிக்கிறோம்.. 

இந்நிகழ்ச்சியில் சிங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கனகலாதாவும் மலேசியாவின் நண்பர் அ. பாண்டியனும் பேசவிருக்கிறார்கள்.மலேசிய தீவிர இலக்கிய உலகின் தன்னை அழுத்தமாக நிறுவிக்கொள்ளும் வகையில் படைப்புகளைத் தந்துகொண்டிருக்கும் அர்வின் குமார் நிகழ்ச்சியை நடத்துனராக நியமிக்கப்பட்டிருந்தார்.இதில் என்ன விஷேசம் என்றால் நாங்கள் நால்வருமே வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அந்தந்தக் காலக்கட்ட இலக்கிய வளர்சிதை மாற்றங்களை /நடவடிக்கைகளை சொல்வதில் சுவாரஸ்யம் மிகும் அல்லவா?

நான் நேராக பினாங்குக்கு செல்ல முடியாது. காலை 9.00 மணிக்கு சிங்கை பி.கிருஷ்ணன் அரங்கு வித்யாரண்யத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழா நிகழ்ச்சிகளில் மைய அரங்கம் இது. வல்லினம் இதற்காகத் தீவிரமாக உழைத்தது நிகழ்ச்சி நடக்கும் போது நிரூபனமானது. அவர் மொழிபெயர்த்த ஷேக்ஹ்க்ஸ்பியர் நூல்கள் விற்பனைக்கு தயார்செய்யப்பட்டிருந்தது அதில் முக்கியமானது. அபாரமான உழைப்பு அது. 


வல்லின நிறுவனர் ம. நவீனின் உற்சாகமான இலக்கிய முன்னெடுப்பைப் பல ஆண்டு காலமாக நான் பார்த்து வருகிறேன். நிகழ்ச்சிகளை நேர்த்தியாக ஒருங்கு செய்வதிலும்,  அவை சரியாக நடக்க ஓடியாடி முழு கவனம் செலுத்துவதையும் நான் தூர இருந்து அவதானித்து வருகிறேன். தன்னையும் மேம்படுத்திக்கொண்டு தன்னிடம் வரும் இளவல்கள்களையும் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபடச்செய்வதில் அவர் காட்டும் அக்கறையை நான் வியந்து நோக்கியிருக்கிறேன். பொதுவாகவே மலேசிய படைப்பிலக்கியத்தின் தரம் நோக்கி நகர்த்துவதில் மிகுந்த அக்கறையையும் தொய்வில்லாமல் காட்டுபவர். வல்லினம் தோற்றச்செயல்பாட்டை ஒரு பெருநிகழ்வு என்று முன்பு ஒருநாள் ஜெ சொன்னது நிதர்சனமானது.


பெரியவர் பி. கிருஷ்ணனைக் கொண்டாடும் நிகச்சியில் அவரும் உடன் இருப்பது அதனைவிடவும் அவசியம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக 91 வயதானவரை கடல்கடந்து கொண்டுவருவது எளிதான ஒன்று அல்ல! லதா வந்தால் நான் வருவேன் என்ற உறுதியோடு அவர் வந்திருந்தார். கலை இயல்பாகவே ஒரு படைப்பாளனை உற்சாகம் குறையாமல் வைத்திருக்கும் என்பதற்கு வாழும் உதாரணம்  கிருஷ்ணன். உடற் சோர்ந்த நிலையிலும் உள்ளம் வாடாதிருந்தது அவருக்கு. கலை தன் ஆன்மாவை படைப்பாளினிடம் முழுமையாகவே ஒப்படைத்துவிடுகிறது போலும்.

நான் சற்று தாமதமாகத்தான் வித்யாரண்யத்திற்குப் போனேன். எனக்கு சியாடிக்கா என்ற முதெலும்பு பிறழ் நோயுண்டு. பல இரவுகளில் என்னோடு பொருதியவாறிருக்கும். அதற்கு சிகிழ்ச்சை மருத்துவம் இல்லையென்பதால் நான் பொருதித்தான் ஜெயிக்கவேண்டியுள்ளது. அது ஜெயித்துவிடுகிறது என்று சொல்வது ஒரு போராளியின் தன்னம்பிக்கைக்கு இழுக்கல்லவா?

 இரவெல்லாம் 

உன் நினைவுகள் /

கொசுக்கள்/ 

என்ற அப்துல் ரஹ்மான் ஹைக்கூவை இங்கே நான் நினைவுகூர்வது என் இரவுச் சமரை  விவரிக்கவே.

ஜி எஸ் எஸ் வி நவீன், பி.கிருஷ்ணன்,அருண்மகிழ்நன்

சிங்கப்பூர் பி.கிருஷ்ணன் அரங்கு மிக நேர்த்தியாக ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. மண்டபம் நிறைந்து உயிர்ப்போடு இருந்தது. இந்த ஜோர்ஜ்டௌன் இலக்கிய கொண்டாட்டத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இது. பி. கிருஷ்ணன் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்தில் இயங்கிவருபவர். இங்கே கி ராஜநாராயனன் நினைவுக்கு வருகிறார். அவருக்கு ஈடான உழைப்பை நல்கியவர். எண்ணற்ற நூல்களை கொடுத்தவர். அடுத்த ஆண்டும் இன்னொரு நூலைக் கொடுக்கும் கனவை ஏந்திக்கொண்டிருப்பவர் அந்தக் கனவு சாத்தியமாகும் நம்பிக்கை அவர் பேச்சில் இருந்தது எத்துணை உவப்பானது!



கணேஷ் பாபு

அ. பாண்டியன், சிங்கை அழகுநிலா, லதா, கணேஷ் பாபு, அர்வின் குமார்,ஜிஸ் எஸ்வி நவீன், அருண்மொழி நங்கை ஆகியோர் பெரியவர் கிருஷ்ணனின் பல்வேறு படைப்புகள் சார்ந்து பேசினர். முனைவர் இளம்பூரணன் நிகழ்ச்சியை ஒரு டன்ங்கு செய்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சபையில் வைக்கப்பட்டது. ஒன்றில் இருந்தது பிறிதொன்றில் மீள்பார்வை செய்யப்படவில்லை என்பதே அதன் சிறப்பாக அமைந்தது.

லதா
அழகுநிலா

முனைவர் இளம்பூரணன்

ஜி எஸ் எஸ் வி நவீன்

அ.பாண்டியன்



அர்வின் குமார்



அருண்மொழி நங்கை


பெரியவர் கிருஷ்ணன் ஏற்புரையாற்றும்போது குரலில் தெளிவும் உச்சரிப்பில் தூய்மையும்  இருந்தது. அவர் கொஞ்சம் மூச்சு சுவாசித்துப் பேசியிருக்கவேண்டும். ஒரே மூச்சில் பேசுவதுபோல இருந்தது. அதனால் சில நிமிடங்களிலேயே அசந்து போனார். அவரைத் தாங்கி வந்து இருக்கையில் அமரவைக்க வேண்டியதாயிற்று. அவரின் உற்சாகத்திற்கு முதுமை பெரும் சவாலாக இருந்திருக்கிறது.

நிகழ்ச்சி முடிந்து நான் மணி ஒன்றரைக்கு அங்கிருந்து பினாங்கு நிகழ்ச்சி நடக்கும் விடுதிக்குக் கிளம்பிவிட்டேன். விருந்தினர்களை தங்கள் காரில் ஏற்றிவர நடந்த போட்டியில் நான் பின்வாங்கிவிட்டேன்.  விருந்தோம்பலில் நாம் எப்போதுமே சுணங்கியதில்லை அல்லவா?



  இணையுங்கள்....

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த