Skip to main content

யாருமற்றவர்களின் மறைவு


 

உடன் யாருமற்றவர்கள்

யாருமற்றவர்களாகவே

இறந்துபோகிறார்கள்

 

உள் தாழ்ப்பாளின்

முழு பாதுகாப்புடன்

நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு

 

திரும்ப அழைக்கக்கூடுமென்றே

நம்பித் தொலைக்கிறது

பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்

 

சேர்ந்தும் சேராது

நிரம்பி மினுக்கிட்டபடியே

காத்திருக்கின்றன

குறுந்தகவல்கள்

 

வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள்

பொறுப்பற்றவன் என்ற

நிர்வாகக் கோபத்தில்

கனன்றுவிடுகிறது

 

பிள்ளைகள் தொடர்புகள்

எரிச்சலூட்டி அடங்கும்போது

அப்பா எப்போதும் போலவே

வெளிநாடு சென்றிருக்கலாமென

ஆசுவாசப்படுகின்றன

 

 

தொந்தரவாகுமென்ற மருகலே

கதவு தட்டல்கள்

இரண்டு முறைக்குபிறகு

நிராகரித்துவிடுகின்றன

 

பதிலற்றபோது

கடன் கொடுத்தவன் மனம்

இவன் இறந்திருக்ககூடாதென்றே

வேண்டிக்கொள்கிறது

 

இறந்த பின்னும் நீடிக்கிறது

உயிரோடிருந்தபோது

நிலை கொண்ட

வீட்டின் மௌனம்

 

இருட்டிலிருந்து மீண்ட

மின்விசிரி வெளிச்சத்தில்

மேலும் இரைந்து

சுழன்றுகொண்டிருந்தது

 

தான் செத்துப்போனால்

யாருக்கும் தெரியாமல் போய்விடுலாம்

என்ற கவலை

இனி ஒருபோதும்

அதற்கில்லை

 

 

                         

Comments

மனதை என்னவோ செய்கின்றன இக்கவிதைவரிகள். இப்படித்தான் நடக்குமென்றால், நான் கூவிக்கொண்டு கூடிவாழவே ஆசைப்படுகிறேன்.
ko.punniavan said…
நன்றி விஜி. என் நண்பர் ஒருவர் தனித்து வாழும்போது உண்டான அனுபவம்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ஐயா வணக்கம்.நான் கல்லூரி பேராசிரியர். என் மாணவர்களின் முனைவர் பட்டத்திற்காக மலேசிய படைப்புகளைத் தரலாம் என நினைத்துள்ளேன.தங்களின் படைப்புகள் மற்றும் ரெ. கார்த்திகேசு ஐயாவின் படைப்புகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும்?தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
ko.punniavan said…
பேராசிரியர் பிரேமலதா, நன்றி. தமிழகத்தில் எங்கள் நூல் கிடைப்பது அரிது. தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தில்,ஆதிகுமணன் நூலகத்தில என்னுடைய முதல் மூன்று சிறுகதை தொகுப்புகள் சேகரித்து வைத்துள்ளார்கள். மற்றபடி கடைகளில் மலேசிய நூல்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி.
மலேசியாவிலிருந்து ரெ.கா புலோக் போய்ப்பாருங்கள்.
MUNIANDY RAJ said…
அருமையான கவிதை. தனிமையின் மரணத்தில் காணாமல் போனவர்களின் அவலக்குரலாய் ஒலிக்கிறது..! தனிமையில் மரணிப்பது உண்மையில் கொடுமைதான்.... மிகச் சிறப்பான வரிகள்

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

அதிர்வுகள் அனுபவங்கள்

                                             புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது. அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது. அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில். யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்.. இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண...