புதுக்கவிதை ஆழமான தடம் பதிக்க மிக முக்கியமான காலக்கட்டமாக இதனைக்கருதலாம். புதுக்கவிதையை முன்னெடுத்துச்செல்வதற்கும், பல புதுக்கவிஞர்களை உருவாக்குவதற்கும் இந்தச் சர்ச்சை வழி அமைத்துக்கொடுத்தது. அவர்களின் எதிர்ப்பே இந்த வடிவம் தழைப்பதற்கான பலத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு நீண்ட,செறிவான இலக்கண இலக்கிய மரபு சார்ந்த தமிழுக்குப் புதுக்கவிதை என்ற இறக்குமதி வடிவம் தேவையில்லை என்று யாப்பில் கரைகண்டவர்கள் மிகுந்த கோபத்தோடு தங்களின் வசவுகளால் புதுக்கவிதையாளர்களைத் திட்டித்தீர்த்தனர். தாயுமின்றி தந்தையுமின்றித் தப்பால் பிறக்கும் ஒரு கவிதை தாளமுமின்றிக் கோலமுமின்றித் தவறால் பிறப்பது புதுக்கவிதை சாலை விதியை சமிக்ஞை விளக்கை சாராதோடும் புதுக்கவிதை நாலும் செறிந்த நமக்குள் வழக்கை நாசமாக்கட்டும் புதுக்கவிதை (தீப்பொறி) புதுக்கவிதை வடிவத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் பற்பல கவிதைகளும் கட்டுரைகளும் அப்போது எழுதப்பட்டன. அன்றைய வாசகனுக்கும், யாப்பிலக்கணத்தைக்கற்றுத்தேர்ந்த பிறகுதான் கவிதை எழுத வரவேண்டும் என்ற பிடிக்குள் சிக்கிகொண்டு எழுத முடியாமல் தவிப்பவனுக்கும் புதுக்கவிதை புதிய படை...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)