Skip to main content
புதுக்கவிதை ஆழமான தடம் பதிக்க மிக முக்கியமான காலக்கட்டமாக இதனைக்கருதலாம். புதுக்கவிதையை முன்னெடுத்துச்செல்வதற்கும், பல புதுக்கவிஞர்களை உருவாக்குவதற்கும் இந்தச் சர்ச்சை வழி அமைத்துக்கொடுத்தது. அவர்களின் எதிர்ப்பே இந்த வடிவம் தழைப்பதற்கான பலத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது.


ஒரு நீண்ட,செறிவான இலக்கண இலக்கிய மரபு சார்ந்த தமிழுக்குப் புதுக்கவிதை என்ற இறக்குமதி வடிவம் தேவையில்லை என்று யாப்பில் கரைகண்டவர்கள் மிகுந்த கோபத்தோடு தங்களின் வசவுகளால் புதுக்கவிதையாளர்களைத் திட்டித்தீர்த்தனர்.



தாயுமின்றி தந்தையுமின்றித்

தப்பால் பிறக்கும் ஒரு கவிதை

தாளமுமின்றிக் கோலமுமின்றித்

தவறால் பிறப்பது புதுக்கவிதை

சாலை விதியை சமிக்ஞை விளக்கை

சாராதோடும் புதுக்கவிதை

நாலும் செறிந்த நமக்குள் வழக்கை

நாசமாக்கட்டும் புதுக்கவிதை (தீப்பொறி)



புதுக்கவிதை வடிவத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் பற்பல கவிதைகளும் கட்டுரைகளும் அப்போது எழுதப்பட்டன.

அன்றைய வாசகனுக்கும், யாப்பிலக்கணத்தைக்கற்றுத்தேர்ந்த பிறகுதான் கவிதை எழுத வரவேண்டும் என்ற பிடிக்குள் சிக்கிகொண்டு எழுத முடியாமல் தவிப்பவனுக்கும் புதுக்கவிதை புதிய படைபிலக்கியத்தளத்தை வழியமைத்துக்கொடுக்கிறது என்று எதிர்வாதம் செய்த விடாகொண்டன்கள் இருக்கத்தான் செய்தார்கள்.



இலக்கியக்காவலர்களாய்

எக்காளமிடும்

ஓ.......கிளிப்பிள்ளைகளே

நீங்கள் வேலி போட்டுத்தான்

மஞ்சத்தில் குலவுகின்றீர்கள்

ஆனால்

உணர்ச்சியற்ற சொல்லடுக்குகளில்

மஞ்சங்கள் பாடைகளாக மாறுகின்றன

நீங்கள் பினத்தைப்பெற்றுத்தள்ளுகிறீர்கள்

உங்கள் சாலைவிதிகள்

எங்கள் புத்துணர்ச்சிகளை

முடமாக்கிப்போட

உண்டாக்கப்பட்ட

சர்வாதிக்காரக்கூச்சல்

உங்கள் சமிக்ஞை விளக்குகள்

எங்கள் நவீனக்கார்களுக்குப்

போடப்பட்டதல்ல

இருளில் சுழலும்

செக்கு மாடுகளுக்காகப் போடப்பட்ட

சிம்னி விளக்குகள் (எம். ஏ. இளஞ்செல்வன்)

என புதுக்கவிதையின் வளர்சிக்காக எதிர்வாதம் செய்கிறார்.



கவிதையை வாசகனிடம் கொண்டு சேர்ப்பதில் கருவி, கருப்பொருள் இதில் எது மிகப்பெரிய பங்களிப்பு செய்கிறது என்பதற்கான விவாதத்துக்கு இன்றைக்குப் பதில் கிடைத்துவிட்ட நிலையிலும் இன்னும் ஓரிருவர் புதுக்கவிதை, கவிதை இனத்தைச்சாராது என்று தள்ளிவைத்து, மல்லுக்கு நிற்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ...... தொடரும்

Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...