Skip to main content
மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்


கோ.புண்ணியவான்.

பகுதி 1

மலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாறு 1876 லேயே தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் தக்க சான்றுகளோடு முன்வைக்கிறார்கள். பினாங்கில் 1876 ல் தங்கை நேசன் என்ற தலைப்பில் மலேசியாவின் முதல் பத்திரிகை அச்சாகி வருகிறது.மலேசியாவில் புனையப்பட்ட முதல் இலக்கிய வடிவம் மரபுக்கவிதைதான்.ஆனால் முதல் புதுக்கவிதை பிறந்தது 1964 ஆம் ஆண்டுதான்.

மலேசியாவில் புதுக்கவிதை விதை நடப்பட்டு இன்றைக்கு கிட்டதட்ட அரை நூற்றாண்டை எட்டிப்பிடிக்கவிருக்கிறது.

முதல் மரபு மீறிய கவிதை கள்ளப்பார்ட்டுகள் என்ற தலைப்பில் சி.கமலநாதனால் எழுதப்பட்டு தமிழ் முரசு ஞாயிறு பதிப்பில் வெளியானது.இது பிரசுரமான ஆண்டு 1964.



மதியின்றிப் பிதற்றுவதும்

இங்கு

உள்ளதைத்தின்று,

ஊதிப்பெருப்பதல்லால்

உருப்படியாய் செய்வதென்ன?

என்று அடியெடுத்துக்கொடுக்கிறார் சி. கமலநாதன். இவரே மலேசிப்புதுக்கவிதைகளின் முன்னோடி என்று தயங்காமல் குறிப்பிடலாம்.இவரைத் தொடர்ந்து பைரோஜி நாராயணன், எம்.துரைராஜ், அக்கினி, ராஜகுமாரன், ஆதிகுமணன், எம்.ஏ. இளஞ்செல்வன் என புதுக்கவிதைக்கான முதல் தலைமுறை எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள்.

புதுக்கவிதைக்கு அல்லது மரபு மீறிய கள்ளப்பார்ட்டுக்கு தமிழ் முரசு சுவீகரித்திருந்தாலும் அதனை உச்சி முகர்ந்து உளப்பூர்வமாக அங்கீகாரம் கொடுத்தது அன்றைய தமிழ் மலர் நாளேடு.இருப்பினும் பல்வேறு காரணங்களால் புதுக்கவிதை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.அப்போது மரபுக்கவிதைகள் ஆழாமாகக்காலூன்றி, யாப்பறிந்து நிறைய எழுதாளர்களையும் அதற்கான விரிந்த வாசக வரவேற்பையும் அது பெற்றிருந்ததால் யாப்பை முறித்த இந்த புதிய வடிவம் வரவேற்பைப் பெறத்தவறியது. இந்த வடிவம் மரபு சார்ந்த மொழியை அழித்தொழித்துவிடும் என்ற அவர்களின் பாசிஸ மனோபாவமும், தார்மீகக் கோபமுமே புதுக்கவிதை வளர்ச்சியைக் கொழுந்திலேயே கிள்ளி எரிந்து விடுவதற்கான காரணியாகவும் அமைந்தது.அன்றைக்கு வெளியாகிக்கொண்டிருந்த பத்திரிகைகளும் வார மாத ஏடுகளும், மரபுக்கவிதைக்குக்கிடைத்த மரியாதையைக் காரணமாகக்காட்டி, புதுக்கவிதைக்கான வாசலைத் திறந்துவிட மறுத்தன.யாப்பிலக்கணத்தோடு எழுதப்படுவதே கவிதை, மற்றவையெல்லாம் கவிதைகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்த்தரப்பிலிருந்து (மரபுக்கவிஞர்களும், அதனை ஆதரிப்பவர்களும் ) குரல் கொடுத்து ‘கொடி பிடிக்க’ஆரம்பித்தனர். பின்னர் இதுவே கவிதை ஆர்வலர்களிடையே அச்சு ஊடகம் வழி ஒரு காத்திரமான சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது.

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

அதிர்வுகள் அனுபவங்கள்

                                             புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது. அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது. அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில். யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்.. இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண...