Skip to main content

Posts

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

(ஏர் ஆசியா பற்றி ஒரு கொசுறு செய்தி. சிக்கனச் சேவை என்ற பெயரில் பயணிகள் பணத்தின் மேல் குறி வைக்கும் உத்தி பற்றிய செய்தி இது. நான் அனுபவித்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது) 4.ஏற்காடு மலைக்குளிரும் இலக்கியச் சாரலும்.                                                         ஏற்காடு விடுதி இந்தப்பயணம் மிகக் கடுமையான பயணமாக இருக்கும் என்று முன்னரே தெரிந்திருந்தால் பயணத்தை ரத்து செய்திருப்பேன். கடந்த ஆண்டு கலந்துகொண்ட ஊட்டி இலக்கியச் சந்திப்பின் இனிமையான நினைவுகள் ஆறுவதற்கு முன் இந்த ஆண்டு இன்னுமொரு இலக்கிய முகாமுக்கு ஏற்காடு பயணப்பபட்டோம். இலக்கியம் எங்களுடைய ஆன்மாவில் இரண்டரக் கலந்துவிட்ட ஒன்று. அதிலும் ஜெயமோகன் குழுமத்தின் ஏற்பாடு. சொட்டச் சொட்ட இலக்கியம் மட்டுமே பேசி, விவாதித்து, சண்டையிடும் ஒரு கொண்டாட்...

காசிக்குப்போவது பாவம் தீர்க்கவா?

3. ரயில் பயணம்                                                   சுற்றுப் பயண வழிகாட்டி சரத் ஏர் ஆசியா போன்ற கருமித்தனமிக்க சேவைகள் போலல்லாமல் மாஸ் விமானம் தாராளமான வசதிகள், சேவைகள் செய்து தருகிறது. நல்ல அகலமான இருக்கைகள், கால் நீட்டி சாய்ந்துகொள்ள போதுமான இடம், அமர்ந்துவுடன் நம் இருக்கைக்கு முன்னால் அமைக்கப்பட்ட தொலைக்காட்சி, அதில் விரும்பித் தேர்வு செய்துகொள்ள நிகழ்ச்சிகள் என உல்லாச பயணத்துக்கான முகமன் செய்து தருகிறது. அமர்ந்த சற்று நேரத்தில்  பொறித்த நிலக்கடலையும், ஆரஞ்சு ஆப்பில் ஜூஸ் கொடுக்கிறார்கள். சற்றுநேரத்தில் தேநீர் காப்பி வருகிறது. பியர், விஸ்கி, வைனும் பரிமாறுகிறார்கள். பின்னர் இரவு உணவு, பிரியாணி, தேங்காய்ச் சோறு கொடுக்கிறார்கள். பியர் விஸ்கி மீண்டும் கேட்டால் கிடைக்கிறது. கட்டணமில்லை. இந்தியர்களுக்கு இந்தச் சேவை எவ்வ...

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

2. காத்திருப்பு மாலை ஆறரை மணிக்குத்தான் எங்களின் விமானப் பயணம் தொடங்கும். நானும் மனைவியும் (என் மனைவியும்) காலை 11.30க்கெல்லாம் கே.எல்.ஐ.ஏ விமானத்தளத்தில் வந்து இறங்விட்டோம். விமானம் ஏறும் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை. என்    இளைய   மகன் முதல்நாளே கே,எல்லில் ஒரு திருமண நிகழ்வுக்கு வந்துவிட்டிருந்தான்.  வந்த உடனே கூப்பிடுங்கள் , கே எல் பிரிக்பில்ஸில் பகலுணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விமானத் தளத்தில் விட்டுவிடுகிறேன் என்றான். அந்தத் திட்டம் சரியாக வராது. அவன் இருக்கும் இடத்திலிருந்து விமான நிலையத்துக்கு ஒன்றரை நேரப் பயணம். பயணத்துக்கே நேரம் ஓடிவிடும். அதனால் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். அங்கேயே பகலுணவு உண்டோம். இரண்டாம் தளத்தில் கொஞ்சம் மலிவாகத்தான் உணவு கிடைக்கிறது. ஆனால் பசிக்குச் சாப்பிடலாம். எனவே பசித்தவுடன் சாப்பிடுவதுதான் உணவைச் சுவையாக்கும் சமரச உத்தி. அன்றைக்கு விமானத் தளத்தைக் கவனத்துடன் பார்வையிட்டேன். நான் ஓரிரு முறை வந்தபோது அதன் கட்டமைப்பு குழப்பமானதாகவே பட்டது...

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா? (பயணக் கட்டுரை)

                        காசிக்குப் போவது பாவம் தீர்க்க?                                                                              கங்கை நதி 'மீண்டும் வட இந்தியப் பயணம் போரடிக்கும்' என்றேன் என் மனைவியிடம். 'வாரனாசி(காசி), ரிசிகேஸ், ஹரிதுவார் போன்ற புனித ஸ்தலங்களைப் இன்னும் பார்க்கவில்லையே,' என்றாள் இல்லாள். 'அங்கேயும் ஹிந்தி பேசியே கொல்வார்கள், வார் மாதிரி இழுத்துத் தின்னும் நான் போடுவார்கள் , நீராவி கொண்டு அவித்த சோறு,  சோனா பப்டி, குலாப் ஜமூன் போன்ற அதி இன...

யாருமற்றவர்களின் மறைவு

  உடன் யாருமற்றவர்கள் யாருமற்றவர்களாகவே இறந்துபோகிறார்கள்   உள் தாழ்ப்பாளின் முழு பாதுகாப்புடன் நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு   திரும்ப அழைக்கக்கூடுமென்றே நம்பித் தொலைக்கிறது பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்   சேர்ந்தும் சேராது நிரம்பி மினுக்கிட்டபடியே காத்திருக்கின்றன குறுந்தகவல்கள்   வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள் பொறுப்பற்றவன் என்ற நிர்வாகக் கோபத்தில் கனன்றுவிடுகிறது   பிள்ளைகள் தொடர்புகள் எரிச்சலூட்டி அடங்கும்போது அப்பா எப்போதும் போலவே வெளிநாடு சென்றிருக்கலாமென ஆசுவாசப்படுகின்றன     தொந்தரவாகுமென்ற மருகலே கதவு தட்டல்கள் இரண்டு முறைக்குபிறகு நிராகரித்துவிடுகின்றன   பதிலற்றபோது கடன் கொடுத்தவன் மனம் இவன் இறந்திருக்ககூடாதென்றே வேண்டிக்கொள்கிறது   இறந்த பின்னும் நீடிக்கிறது உயிரோடிருந்தபோது நிலை கொண்ட வீட்டின் மௌனம்   இருட்டிலிருந்து மீண்ட மின்விசிரி வெளிச்சத்தில் மேலும் இரைந்து சுழன்றுகொண்டிர...

பேரமைதியைக் கொல்லும் பெருங்குரல்

                                                             கவிஞர் பாலு மணிமாறன் சிங்கப்பூர் பாலு மணிமாறனின் காதல் கவிதைகளை முகநூலில் படிக்கும் போதெல்லாம் எனக்கு வயதானதே ஒரு கணம் மறந்துபோகிறது. என்னை மட்டுமல்ல காதல் எல்லாருக்குமே இளமையை நினைவு படுத்துகிறது- ஆமாம் படுத்துகிறது. நான் நினைப்பேன் காதல் தோல்வி காணும்போதுதான் அது சாகாவரம் பெறுகிறது என்று. காதலில் ‘வென்றவர்கள்’ பாவம் கல்யாணம் ,  குடும்பம் என்ற சாகரத்தில் போய் விழுந்து எதிர் நீச்சல் போட முடியாமல் சிக்கித் தவிக்கிறார்கள். அதனால்தான் காதல் , கால்யாண ஆப்கானிஸ்தான் எல்லையைத் தொடக்கூடாது என்று சொல்கிறேன். கல்யாணம் செய்யாமல் வாழ முடியாதே என்று யாரோ சிலர் எதிர்வினையாற்றுகிறார்கள். காதலர்களாக இருந்தவர்கள் கல்யாணத்துக்குப் பிறகு அதிகாரமும் அகம்பாவமும் பிட...

கர்ண மோட்சம்

கலை சார்ந்து இயங்குபவர்கள் எப்போதுமே  ஒரு பித்த நிலையில் இருப்பார்கள். குறிப்பாக அதற்குள் அவர்கள் ஒரு தீவீரத் தன்மையை வளர்த்துக் கொண்டு, சதா அதனைப் பற்றிய சிந்தனையிலேயே லயித்துக் கிடப்பார்கள்.  அதனுள் உள்ளிறங்கிவிட்டவர்கள் ஒரு ஞானியைவிடவும் அற்புதமான கலையாற்றலை வெளிக்கொணரும் அபூர்வமான சாத்தியங்களையும்  பெற்றிருப்பர். இது கலையில் தோய்ந்த முயக்கத்தின் உண்டான முக்தி நிலை. இதற்கு வேறெங்கும் உதாரணம் தேட வேண்டாம். பாரதி ஒருவனே போதும். கலைகளில் சினிமாதான் காந்தம் கொண்டு ஈர்க்கும் விநோதச் சக்தியைக் கொண்டது. சினிமா பித்து பிடித்த பலரை நான் சந்தித்திருக்கிறேன். கலைகளில் சினிமா சார்ந்து செயல்படத்துடிக்கும் ஒருவனை ஆமைத் தன் தலையை உள்ளிழுத்துக் கொள்வதுபோல கவ்வி இழுத்துக் கொள்ளும். சதா சினிமாதான் அவன் உயிர் மூச்சாக இருக்கும். அவன் பேச்சில், அவன் உடல்மொழியில் சினிமாதான் ஆக்ரமித்து நிற்கும். “என் வேலையை விட்டுவிட்டு, நான் சினிமா இயக்குனராகப் போகிறேன்,” என்று சொன்ன ஒரு நண்பர் சொன்னபடியே நாலு இலக்க சம்பளத்தை உதறிவிட்டு சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். எழுபதுகளில் ஒரு பிரபல மரபுக் கவ...